Skip to main content

புனித ஹஜ் பயணம் பெயரில் மோசடி !

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

இஸ்லாமியார்கள் தங்களுடைய வாழ்நாள் கனவாக வைத்திருப்பது புனித ஹஜ் பயணம். இந்த புனித பயணத்தை வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்வார். அப்படி சேர்த்து வைத்திருந்த பணத்தையும் ஹஜ் பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று மோசடி செய்த சம்பவம் திருச்சியில் நடந்து உள்ளது.

 



திருச்சி உறையூர் கீரை கொல்லை பகுதியை சார்ந்தவர் அகமது பசீர் இவர் இஸ்லாமியர்களின் புனித பயணம் ஹஜ் பயணத்தை செல்ல முடிவு செய்தார்.

 

police


அதற்காக மேலும் தன்னுடன் 3 பேரை சேர்த்துக் கொண்டு டிராவல்ஸ் ஏஜென்சியிடம் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார். திருச்சி பீமநகர் பங்காளி தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் முகமது அனிபாவை சந்தித்துப் பேசினார். அவரும் அதற்காக அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாக உறுதியளித்தார். இதற்காக கட்டணமாக அகமது பசீர் மற்றும் அவருடைய நண்பர்களிடம் மூன்று பேரும் சேர்ந்து 10 லட்சத்து 60 ஆயிரத்து ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்வதற்காக கொடுத்தனர்.

 



ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான எந்தவித ஏற்பாடுகளில் செய்யாமல் டிராவல்ஸ் உரிமையாளர்கள் காலதாமதம் செய்துள்ளனர். குறிப்பிட்ட தேதியை தாண்டியும் இதற்கான ஏற்பாடுகள் செய்யாதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்கள் பணத்தை திரும்ப கேட்டு கேட்டுள்ளனர் ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை முகமது அனிபா தங்களிடம் 10 லட்சத்து 60 ஆயிரத்து முதல் மோசடி செய்து விட்டதை அறிந்த அவர்கள் இன்னும் பேரதிர்ச்சி அதிர்ச்சி அடைந்தனர்.

 



இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அகமது பசீர் சார்பில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் கிளை திருச்சி மாநகர போலீஸ் துணை ஆணையர் நிஷாவுக்கு முகமது ஹனிபா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை கோரி உத்தரவிட்டது அதன்பேரில் முகமது அனிபா மீது 10 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்து தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.