Skip to main content

''அவர் விலகியது வருத்தத்துக்குரியது... பின்னர் தெளிவாக விளக்கம் அளிக்கிறேன்''-அமைச்சர் முத்துசாமி பேட்டி!

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

"His resignation is regrettable... I will give a clear explanation later" - Minister Muthusamy interview!

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 24 ந் தேதி சென்னை வண்டலூரில் துவக்கி வைத்துள்ள 'பசுமை தமிழக இயக்கம்' திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு 7 லட்சம் மரக்கன்றுகளும் அடுத்த ஆண்டு 20 லட்சம் மரக்கன்றுகளும் நடப்படும் என வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை அவர் நட்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று மட்டும் மாவட்டத்தில் நாலாயிரம் மரக்கன்றுகள் நடப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2030க்குள் மாநிலத்தின் பசுமை பரப்பை 23.27 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 39 சதவிகிதமாக பசுமை பரப்பு உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வனத்தில் உள்ள வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சத்தியமங்கலம் சாலை விரிவாக்கத்தில் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக பத்து மரக்கன்றுகள் நடப்படும். மரங்களை வேரோடு பிடுங்கி நடுவதில் முழு வெற்றி இல்லை அதனால் தான் வெட்டப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் தம் பகுதியில் இருந்த பூங்காவை அழித்ததாக செய்தி வந்தது. உண்மையில் அப்பகுதியில் சாக்கடை நீர் செல்ல வசதி இல்லை. அதற்காக நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மாநகராட்சி சார்பில் வெண்டிபாளையத்தில் அடர்வனம் திட்டம் துவக்கப்பட்டது. அதை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2016 க்கு முன்பு வாங்கப்பட்ட டிடிசிபி அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளிலும் உரிய அளவு சாலை மற்றும் பொது வசதிகள் ஏற்படுத்தி அரசிடம் அனுமதி பெற வேண்டும். டிடிசிபி அப்ரூவல் இல்லாத மனைகளை பதிவு செய்வதை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் பெருந்துறை சாலையில் மேம்பாலம் கட்ட பரிசீலிக்கப்படும். ஈரோடு நகரில் தோல் தொழிற்சாலை மற்றும் சாய சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் குறித்து ஆய்வு நடைபெறும். கழிவுநீரை ஒரு இடத்திற்கு கொண்டு வந்து சுத்திகரிக்கலாமா அல்லது கலைஞர் ஆட்சியில் குறிப்பிட்டபடி கடலில் விடலாமா என்ற ஆய்வு நடக்கிறது. விதிகளுக்கு உட்பட்டு ஜல்லி குவாரிகள் செயல்பட வேண்டும். இல்லையென்றால் மூடப்படும். சோலாரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் செயல்படும்'' என்றார்.

 

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகி இருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ''அவர் விலகியது வருத்தத்துக்குரியது. இதுபற்றி பின்னர் தெளிவாக விளக்கம் அளிக்கிறேன்'' என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன சேர்மன் குறிஞ்சி என். சிவக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் ஆர்.சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்