Skip to main content

இரண்டு சான்றிதழ்கள்... இரண்டு வெற்றியாளர்கள்... நீதியை நிலைநாட்டிய நீதிமன்றம்...

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

"அது எப்படிங்க..? முதல் நாள் இரவில் தோற்றவர், அடுத்த நாள் அதிகாலையில் வெற்றிப் பெறுகிறார்..? முதல் நாள் இவரு வெற்றிப் பெற்றுவிட்டாரென சான்றிதழ் கொடுக்கிறாங்க.. அடுத்த நாள் அவரு வெற்றிப் பெற்றுவிட்டாங்க சான்றிதழ் கொடுக்கிறாங்க.. இது எந்த வகையில் நியாயம்..?" என ஒட்டுமொத்த தமிழகமும் கேள்வியை பகிர்ந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பினை அளித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலின் விறுவிறுப்பிற்கு சற்றும் சளைக்காமல் நடந்த சங்காரபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் தான் அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியினர் நடத்திய அதிகார துஷ்பிரயோகத்தை வெளிச்சத்திற்கு வந்த நிலையில் அதற்கு நீதிமன்றம் முடிவுரை எழுதியது குறிப்பிடத்தக்கது.

high court madurai branch order sivagangai karaikudi local body election

"முதலில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் பிரியதர்சினி பஞ்சாயத்து தலைவியாக தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் பிரியதர்சினி பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும்." என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் ஆளுங்கட்சியின் துணையுடன் பதவியேற்கவிருந்த பிரியதர்சினிக்கு தடைவிதித்தது நீதிபதிகள் சுப்பிரமணியன் புகழேந்தி அமர்வு.


"சங்காரபுரம் ஊராட்சிமன்றத் தலைவருக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் 11,934. மதியம் 12.00 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், இரவு எட்டு மணியளவில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட தேவி மாங்குடி 310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று விட்டதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். "முழுமையாக எண்ணாமல் எப்படி தேவி மாங்குடி வெற்றிப்பெற்றாரென அறிவிப்பீங்க..? நான் தான் ஜெயித்தேன்." என போட்டி வேட்பாளர் பிரியதர்சினி வாக்குவாதம் செய்த நிலையில் தேவிமாங்குடிக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார் தேர்தல் நடத்தும் அலுவலர் மாலதி.

high court madurai branch order sivagangai karaikudi local body election


எனினும், பிரச்சனையை அவர்கள் கைவிடாததல் அதிகாரிகள் வேண்டுகோளின்படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மீண்டும் சென்றோம். ஒவ்வொரு ரவுண்ட் வாரியாக கணக்கிட்டு அவர்களுடைய சந்தேகத்தை அங்கிருந்த அதிகாரிகள் தெளிவுப்படுத்தினர். அதற்கும் அவர்கள் உடன்படவில்லை. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சம்பந்தேமேயில்லாத முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி அங்கு வந்து, "யாரைக் கேட்டு அறிவிக்கிறீர்கள்..?" என சவுண்ட் விட்டதும் நிலைமை அவர்களுக்கு சாதகமானது. அதன் பின் தேர்தல் பார்வையாளர் கருணாகரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் அங்கு வந்து மறுபடியும் எண்ணிக்கையை சோதிக்க, தேவிமாங்குடி தான் வெற்றிப் பெற்றார் என்பது தெளிவாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். அதன் பின் அதிகாலையில் போட்டி வேட்பாளர் பிரியதர்சினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவித்தார்கள். அதனால் தான் தலைவர் ப.சிதம்பரம் வழிக்காட்டுதல் படி நீதிமன்றத்திற்கு சென்றோம்." என்றார் வாக்கு எண்ணிக்கை முகவர்களில் ஒருவரான ஜெயபிரகாஷ்.

high court madurai branch order sivagangai karaikudi local body election

இது இப்படியிருக்க, தேவி மாங்குடி இல்லத்தில், "மறு வாக்கு எண்ணிக்கைக்கு தேவி மாங்குடி ஒத்துழைக்காமல் வெளியேறியதும், அதில் கலந்து கொள்ள தவறியதும் குறித்ததோடு மட்டுமில்லாமல் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பிரியதர்சினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். அதனால் தங்களுக்கு கொடுத்த வெற்றி சான்றிதழ் செல்லாது." என மூன்றாம் தேதி கையெழுத்திட்ட தங்கள் தரப்பு விளக்க அறிக்கையை ஒட்டியது மாவட்ட நிர்வாகம்.

high court madurai branch order sivagangai karaikudi local body election

"இது முழுக்க முழுக்க போர்ஜரியான வெற்றி.! தேர்தல் வெற்றி செல்லும் செல்லாது என்பதனை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தவிர வேறு யாருமில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்த விளக்க அறிக்கையே முற்றிலும் தவறானது. இன்னொன்று இரவு 08:20 மணியளவில் தேர்தல் அலுவலர் தரப்பில் கொடுக்கப்பட்ட பார்ம் 22ன் படி தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 80. ஆனால், அதிகாலை 4:50 மணியளவில் அதே பார்ம் 22ன் படி தபால் வாக்குகளின் எண்ணிக்கை 49. தபால் வாக்குகளை ஒன்றுமே செய்ய முடியாது. அது எப்படி குறையும்..?  செல்லாத வாக்குகளை செல்லும் வாக்குகளாக அறிவித்து பிரியதர்சினியை வெற்றிப் பெற வைத்துள்ளனர் அதிகாரிகள்." என்கிறார் ஒன்றிய கவுன்சிலராக வெற்றிப் பெற்ற சொக்கலிங்கம்.


இது இப்படியிருக்க தேவி மாங்குடி வெற்றிப் பெற்றதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஜெ.பி. நட்டா வாகன பேரணி விவகாரம்; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
JP Natta vehicle rally issue Judge orders action

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (07.07.2024) மாலை ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி முரளிசங்கர் விசாரித்தார். அப்போது நீதிபதி, “திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ஜெ.பி.நட்டா ரோடு ஷோவை நடத்திக்கொள்ளலாம். மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 1.5 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்திக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

மேலும் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகவும், கரூரிலும் பாஜக சார்பில் நடைபெற்ற  தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.