Skip to main content

டெல்டாவில் கனமழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published on 04/11/2021 | Edited on 04/11/2021

 

 Heavy rains to continue in delta ... Chennai Meteorological Center announcement!

 

டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை தொடரும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர்,  பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை தொடரும்.

 

டெல்டா மாவட்டம், கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தலா 9 சென்டி மீட்டர் மழையும், மாமல்லபுரம், மண்டபத்தில் தலா 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணை, நாங்குநேரி, கேளம்பாக்கம், மணிமுத்தாறு, திருப்போரூரில் தலா 7 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. கேரளக் கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Chance of rain in 17 districts

நேற்று முன்தினம் புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.