Published on 01/06/2022 | Edited on 01/06/2022
சென்னை டி.எம்.சி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.