Skip to main content

''எனக்கு என்றைக்குமே அரசியலில் தலைவர் இவர் மட்டுமே''-நடிகர் நெப்போலியன் பேட்டி

Published on 17/09/2022 | Edited on 18/09/2022

 

"He is the only political leader for me forever" - Napoleon interview

 

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''திமுக ஆட்சியின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். நான் அரசியலிலே இல்லை. அரசியலை விட்டு விலகி ஏழு வருடங்கள் ஆகிறது. இன்னைக்கும் நான் சொல்கிறேன் நான் சாகுறவரை அரசியலில் எனக்கு குரு கலைஞர், சினிமாவில் எனக்கு குரு பாரதிராஜா தான். அதை எப்பொழுது மாற்ற முடியாது. அரசியலுக்கு நான் இனி வரவே மாட்டேன். உலகத்திலேயே பெரிய தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துட்டேன், எம்பியாக இருந்துட்டேன், இந்தியாவிற்கே மந்திரியாக இருந்தேன். இப்பொழுது குடும்ப சூழ்நிலை, குழந்தையின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்பதற்காக அங்கே சென்று விட்டேன்.

 

பகலில் என் மனைவி குழந்தையை பார்த்துக் கொள்வார். நான் இரவில் பார்த்துக்கொள்வேன். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் மக்கள் பணியாற்ற வாய்ப்பு குறைவு. சினிமா துறையில் கூட படங்களில் நடிப்பதை நான் தவிர்த்து வருகிறேன். வருடத்திற்கு 10 படங்கள் கேட்கிறார்கள். ஆனால் நான் ஒத்துக் கொள்வதில்லை. வருடத்தில் ஏதாவது ஒரு படம் ஒப்புக்கொள்கிறேன். காரணம் சினிமாவை விட்டு விலகி இருக்கக் கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்ததிலிருந்து விவசாய குடும்பம். எனக்கு ரொம்ப நாளாக ஆசை அமெரிக்காவில் விவசாயம் பண்ண வேண்டும் என்று. அதற்கான இடம் அமையவே இல்லை கடந்த ஆண்டு 300 ஏக்கர் இடம் வாங்கினேன். அதில் தான் இப்பொழுது விவசாயம் தொடங்கி இருக்கிறேன். வீட்டிற்கு தேவையான காய்கள் அனைத்தையும் நானே விளைவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.