Skip to main content

“அவர் மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றியவர்” - கே.எஸ். அழகிரி பேட்டி!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

"He fulfilled the memory of Mahatma Gandhi" - KS Alagiri interview

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்தநாளையொட்டி சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “இந்தியாவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியவர் ராஜீவ் காந்தி. தொலைபேசி, கணினி ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அன்றே செய்தவர்.

 

சமூக அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை இயற்றியவர், பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை வேண்டும் என வலியுறுத்தி நடவடிக்கை எடுத்து கிராமப்புற வளர்ச்சி அடைந்ததற்கு ராஜீவ் காந்தியின் பணி மிகவும் முக்கியமானது. அவர் மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றியவர். இந்தியா, சீனா நாடுகளின் 50 ஆண்டுகால பகையை உடைத்து புதிய சீன கொள்கையை ஏற்படுத்தியவர். தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் பெட்ரோல் விலை ரூ. 3 குறைத்தது மிகவும் பாராட்டுக்குரியது. அரசியல் ஜாம்பவான் என கூறிக்கொள்ளும் மோடி இதுவரை பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை. தமிழகத்திற்குத் தர வேண்டிய சிறப்பு நிதி உள்ளிட்ட ஜிஎஸ்டி தொகையைத் தராமல் வஞ்சித்துவருகிறார்.

 

தமிழக அரசு, 100 நாட்களில் செய்ய வேண்டிய பணியைத் தாண்டியும் செய்துவருகிறது. கோரிக்கையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்கள் என்று அவர் மீது உறுதியான நம்பிக்கை உள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூகநீதி, அதில் தவறு இல்லை” என்றார். இவருடன் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், விருதாச்சலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், சிதம்பரம் நகரத் தலைவர் பாலதண்டாயுதம், காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கீன், ஜெமினி ராதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.