Skip to main content

ஹாவாலா பணத்தில் மோசடி? சர்ச்சையில் சிக்கிய காவல் நிலையம்...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
img

 

 

தென்காசி மாவட்டத்தின் ஆவங்குளம் காவல் நிலையத்திற்குட்பட்டது தென்காசி - நெல்லை சாலை. கேரளாவின் கொல்லத்திலிருந்து தொடங்கும் இந்த நாற்புற சாலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மாலை 4.30 மணியளவில், தென்காசி – நெல்லை மெயின் ரோட்டில் இரண்டு பேர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பின் சீட்டில் அமர்ந்திருப்பவர் கையில் ஜவுளி கடையின் பெரிய பை கொண்ட பார்சல் வைத்திருந்திருக்கிறார். இந்த பைக் ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் வரும்போது எதிரே வந்த பைக்கில் மோதிவிட இரண்டு பைக்களிலும் வந்தவர்கள் கீழே விழுந்திருக்கிறன்றனர். அப்போது நெல்லை நோக்கி சென்ற பைக்கில் வந்தவர் வைத்திருந்த பெரிய பை, மோதியதில் ரோட்டில் விழுந்து சிதறியிருக்கிறது... சிதறியது கட்டுக்கட்டான பணம்.

 

பதற்றத்தில் அவர் அந்த பணக்கட்டுகளை அள்ளி எடுத்து பையில் திணித்து கொண்டிருந்ததை பார்த்த சிலர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறப்பு எஸ்.ஐ.யான பேச்சிமுத்து சம்பவ இடத்திற்கு வந்து பைக்கில் வந்த இருவரையும் பணத்தையும் கைப்பற்றி போலீஸ் நிலையம் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.

 

ஆலங்குளம் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் பணி ஓய்வு பெற்று போய்விட்டார். முறையான எஸ்.ஐ.யும் ஸ்டேஷனுக்கு நியமனம் செய்யப்படவில்லை. காவல் நிலைய ஆய்வாளரும், எஸ்.ஐ.யும் இல்லாமல் அந்த ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் போலீசார்களின் பொறுப்பிலிருந்திருக்கிறது.

 

எந்த ஒரு குற்ற செய்கை என்றாலும் பிடிபட்டவருடன் தொடர்புடையதையும் வைத்து பத்திரிகையாளர்களை வரவழைத்து படமெடுக்க வைத்து நடந்ததை தெரிவிக்கும் போலீஸ், இந்த சம்பவத்தில் அவ்வாறு செய்யவில்லை. பிடிபட்ட 2 நாட்களுக்கு பின்பு, ஜூலை 16ம் தேதி பைக்கில் வந்தவர்களை விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.

 

அவர்கள் வைத்திருந்தது 34,71,320 ரூபாய் ஹவாலா பணம் என்று தெரிய வந்தது. செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் கடைகளுக்கு சப்ளை செய்து, வாரம் ஒருமுறை கலெக்ட் செய்யும் தொகை என்று அவர்கள் சொன்னதில் உண்மையில்லை. பிடிபட்டவர்களில் ஒருவர் காயல் பட்டினம் அருகேயுள்ள வடக்கு ஆத்தூரின் முகம்மது சேக் முனவரூதின், மற்றொருவர் மேலப்பாளையத்தின் முகைதீன் அசார் என்று மட்டுமே தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்டத்தின் எஸ்.பி.யான சுகுணா சிங், தென்காசி நகரின் இன்ஸ்பெக்டர் ஆடிவேலை அனுப்பி மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.

 

இந்த நிலையில் பிடிபட்ட தொகை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட மறுகணமே ஆலங்குளத்தில் தகவல்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. போலீஸ் வடிகட்டிச் சொல்கிறது. அவர்கள் பிடிபட்டு ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டபோதே காவல் நிலையத்தை வட்டமிடும் புரோக்கர்கள் இருவர், வேறு இரண்டு நபர்கள் உள்ளே போய் டீல் பேசியுள்ளனர்.

 

பிடிபட்ட பணத்தில் பெரும்பகுதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலும் றெக்கை கட்டுகின்றன. மேலதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். “அதிகாரிகள் இல்லாத காவல் நிலையத்தில் திருடிவிட்டார்களா” என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இறுதியாக பிடிபட்டவர்களும் ஹவாலா பணத்துடன் நெல்லை வருமான வரித்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

நாம் இது குறித்து தென்காசி எஸ்.பி.யான சுகுணா சிங்கிடம் பேசியதில், “விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் விரைவில் தெரிய வரும்” என்கிறார். மக்களின் சந்தேகங்களைக் களைய வேண்டிய பொறுப்பிலிருக்கிறது காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.