Skip to main content

25 வருடமா தண்ணீர் குடிப்பதில்லை! ஜீவ சமாதி அடைய முயன்ற அகோரி!!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

Have not drank water for 25 years! Agori sokkanathar


ஆண்டிபட்டி அருகே ஜீவ சமாதி அடைய முயன்ற, அகோரியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் உள்ள, ஆண்டிபட்டி அருகே இருக்கும் மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ஜெயலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகனான அசோக் என்ற சொக்கநாதர், 13 வயதில் காணாமல் போனார். தற்போது, 26 வருடங்கள் கழித்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, தான் வீட்டை விட்டு வெளியேறி, காசிக்குச் சென்றதாகவும், அங்கு சிவனடியார்களிடம் தீட்சைப் பெற்று அகோரியாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
 

திடீரென நேற்று முன்தினம் இரவு சொக்கநாதர், ஜீவசமாதி அடையப் போவதாக, போலீசாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு ராஜதானி போலீசார் வந்தனர். அப்போது,  கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 12 அடி ஆழம் குழி தோண்டப்பட்டிருந்தது. குழிக்குள் சிமென்ட் ஸ்லாப் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. வெளியே ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனர். அதன் உள்ளே சொக்கநாதர், அகோரி கோலத்தில் அமர்ந்திருந்தார். அருகில் சிவன் படம், ருத்ராட்ச மாலை, பூக்கள் கிடந்தன. அப்போது போலீசார் அவரிடம் ஜீவசமாதி அடையக்கூடாது, மேலே வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது அகோரி சொக்கநாதர், தற்போது நாட்டில் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி, மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நல்ல மழைபெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதற்காக சிவன் உத்தரவிட்டதால், பூமிக்கு அடியில் 9 நாட்கள் தவம் இருக்கப் போகிறேன். ஒரு நாள் கழித்து, குழி மீது ஸ்லாப் போட்டு, மேலே மூடிவிடுங்கள். அதன்பின் 9 நாள் கழித்து தீபாவளிக்கு முதல் நாள், நான் வெளியே வருவேன். 

 
நான் சித்தர் இல்லை அகோரி. நான் 25 வருடங்களாக தண்ணீர் குடிப்பதில்லை புகை மட்டுமே புகைத்து வாழ்கிறேன். நான் சாகமாட்டேன். 24 வருடங்களுக்கு முன்பே இறந்து, பல பிறவிகள் எடுத்து மீண்டும், மீண்டும் உயிருடன் வந்துகொண்டிருக்கிறேன். இது எனது உண்மையான உருவம் அல்ல. நான் இப்போது பாம்பு ரூபத்தில் உள்ளேன். அகோரிகள் கோபப்பட்டால் மனிதர்கள் தாங்க மாட்டார்கள். அதனால், என்னை தவம் இருக்கவிடுங்கள் என்று கூறினார். அப்போது போலீசார் பூமிக்குள் இறங்கி, பூஜை செய்ய அரசு அனுமதி இல்லை. வெளியே வாருங்கள் என்று கூறினர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அகோரிக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  
 

cnc

 

சுமார் 2 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வெளியே வந்த அகோரி குழிக்கு மேலே அமர்ந்தார். பூமிக்கு அடியில் அமர்ந்து, பூஜை செய்ய போலீசார் அனுமதி மறுத்ததால் சிவன் மற்றும் நந்தி சிலைகளைப் பிரதிஷ்டை செய்து அதன் அருகில் அமர்ந்து பூஜை செய்ய உள்ளேன் என்று கூறினார்.

 

இதையடுத்து, பொதுமக்கள் குழியை மூடினர். இருந்தாலும் மீண்டும் அகோரி சொக்கநாதர், குழிக்குள் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பும்  இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.