Skip to main content

வெற்றிலை பார்சலுக்குள் குட்கா பதுக்கல்; அலார்ட்டான அரசுப் பேருந்து ஓட்டுநர்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Gutka stashed inside betel parcel

 

அரசுப் பேருந்தில் வெற்றிலைக் கட்டு பார்சலுக்குள் குட்கா பொருள்களை பதுக்கி வைத்து அனுப்பியவர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் மாதவன் (47). இவர், ஓசூரில் இருந்து சேலம் வழியாக கோவை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றி வரும் அரசுப் பேருந்து அக். 17ம் தேதி மதியம் ஓசூரில் இருந்து கிளம்பத் தயாரானது. காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் பேருந்தை ஓட்டிச் சென்றார். கடைசி நேரத்தில் பேருந்தை நோக்கி வந்த ஒருவர், தன்னிடம் இரண்டு வெற்றிலைக் கட்டு பார்சல் இருப்பதாகவும், அவற்றை கோவையில் கொடுத்து விடும்படியும் கேட்டுக் கொண்டார்.

 

இதையடுத்து வெற்றிலை பார்சலை ஏற்றிக்கொண்டு அந்தப் பேருந்து கிளம்பியது. அப்போது அந்த நபர், பேருந்தின் நடத்துநர், ஓட்டுநரின் அலைபேசி எண்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், ஓசூரில் இருந்து பேருந்து கிளம்பியதில் இருந்து கோவைக்குச் செல்வதற்குள் அவர்களுக்கு பலமுறை தொடர்பு கொண்டு, பேருந்து செல்லும் இடத்தை விசாரித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர், ஓமலூர் சுங்கச்சாவடியில் பேருந்தை நிறுத்தி, அங்கிருந்த கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினரிடம் இதுகுறித்து தகவல் அளித்தார்.  

 

இதையடுத்து காவல்துறையினர் அந்த வெற்றிலைக் கட்டுகளை பிரித்து சோதனை செய்தனர். அதற்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக குட்காவை பறிமுதல் செய்தனர்.  மேலும், வெற்றிலைக் கட்டுகளை பார்சல் ஏற்றி அனுப்பி வைத்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.