Skip to main content

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாத நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது எப்படி?

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
cccc

 

 

மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதுநாள்வரை வெளியிடப்படாத நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் குறிப்பாக திருச்சியில் உள்ள  கல்லூரிகளில் 20.07.2020இல் மாணவர் சேர்க்கை ஆன்-லைனில் முடிந்தது எப்படி?

 

இது குறித்து ஓய்வு பெற்ற பேராசிரியர் நம்மிடம் பேசியபோது, திருச்சி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில், இணை இயக்குநர் இல்லை - தஞ்சாவூரில் இருக்கிறார். உதவி இயக்குநர் - வேலூரில் இருக்கிறார். கணக்கு அலுவலர் வழுக்கி விழுந்து கால் முறிந்து அலுவலகம் வருவதில்லை. ஸ்டெனோ டைப்பிஸ்ட் திண்டுக்கல்லில் இருக்கிறார். எஞ்சியுள்ள அலுவலக பணியாளர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் அலுவலகம் வருகிறார்கள். 

 

இதில் பலர் சொந்த விடுப்பும் எடுத்துக் கொண்டு வாரம் முழுவதும் அலுவலகம் வருவதில்லை. மாதாமாதம் இலட்ச ரூபாய் சம்பளத்தை மட்டும் மக்கள் வரிப்பணத்தில் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.

 

மாணவர் சேர்க்கையில் நிகழும் கொடுமைகளை, கட்டணக் கொள்ளைகளைத் தட்டிக் கேட்கவேண்டிய திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் அறிவுடை நம்பி தஞ்சாவூரில் சொந்த வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார். மாணவர் சேர்க்கையின் முறைகேடுகளுக்கு அலைபேசியில் புகார் சொன்னால் அலைபேசியை எடுப்பதில்லை. அலுவலகத்தில் தொடர்பு கொண்டால் RJD தான் நடவடிக்கை எடுக்கமுடியும் எங்களால் முடியாது என்று தொலைப்பேசியைத் துண்டிக்கிறார்கள்.

 

திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின்போது, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசாணை 92-இன்படி எங்களை இலவசமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் பணம் கட்டு இல்லை என்றால் இடம் கிடையாது என்று கல்லூரி நிர்வாகம் மிரட்டுகின்றது. அரசாணையை மீறி தேசியக் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றது.

 

தமிழ்நாடு முதல்வர், உயர்கல்வி அமைச்சர், உயர்கல்விச் செயலர் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் அரசு விதிகளுக்கு எதிராக செயல்படும் உதவிபெறும் கல்லூரியில் நடந்து முடிந்துள்ள மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

 

அரசு கல்லூரிகள் அரசின் விதிகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை முறையாக நடத்தி கொண்டிருக்கும்போது, அரசு உதவிபெறும் கல்லூரிகள் / சிறுபான்மைக் கல்லூரிகள் அரசின் விதிகளை மீறி மாணவர் சேர்க்கையை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது? கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் சிறுபான்மை கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் தமிழ்நாடு அரசு இரத்து செய்ய முன்வரவேண்டும். 

 

கரோனா காலத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் / சுயநிதிக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையடிக்கின்றன. ரூ.3000 செலுத்தப்பட்ட சேர்க்கை தொகை தற்போது 16,800/-(பருவம் ஒன்றிற்கு மட்டும்) உயர்த்தப்பட்டுள்ளது. சுயநிதி கல்லூரிகளில் ரூ.12,000/- பெறப்பட்டப் பாடங்களுக்கு தற்போது ரூ.30,000/- பெறப்படுகின்றது. பிஷப் ஹீபர் கல்லூரியில் வணிகவியல் வகுப்பிற்கு ரூ.40,000/-  எனக் கட்டணம் நிர்ணயித்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. 

 

ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யும்போது முற்றுப்புள்ளி, கமா போன்றவை இட்டால் விண்ணப்பம் பதிவாகாது என்பதை எந்த கல்லூரியும் அதற்கான எச்சரிக்கையை இணைய தளத்தில் வெளியிடவில்லை. மேலும், மாணவர் சேர்க்கையின் முதல் பட்டியல், 2ஆம் பட்டியல், 3ஆம் பட்டியல் வெளியிட்ட பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற 2019-20 கல்லூரிக் கல்வி இயக்குநரின் மாணவர் சேர்க்கைக்காக வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. 

 

தமிழக முழுவதும் இதே மாதிரிதான் கல்வி கொள்ளை நடக்கிறது. இதை உடனடியாக தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது என்றார் விரிவாக. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டமன்ற நாயகர் கலைஞர்; மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Prizes awarded to students who won kalaignar centenary celebration competition

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம், கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டமன்ற நாயகர் - கலைஞர் விழாக் குழு இணைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், விழாக்குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஞானசேகரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞர் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்புகளை செய்துள்ளார்கள். மேலும் அவர்களது முயற்சியால் தமிழ்மொழி செம்மொழியாக உலகம் முழுவதும் சிறந்து விளங்குகிறது.

கலைஞர் நிறைவேற்றிய சட்டங்களும், திட்டங்களும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய வளர்ச்சி திட்டங்களே ஆகும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முன்னோடி திட்டங்களை அறிவித்து சிறப்பு சேர்த்தவர் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story

பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Bengaluru Announcement of holiday for schools and colleges tomorrow
கோப்புப்படம்

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பல்வேறு விவசாய சங்கத்தினர் மண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 

மேலும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழகத்திற்குக் காவிரியில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் நாளை (29.09.2023) அன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவரின் அறிவிப்புக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர‌க் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நாளை டெல்லியில்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.