Skip to main content

மூட்டை மூட்டையாக போதைப் பொருள் பறிமுதல்!!! நுண்ணறிவுப் பிரிவு அதிரடி...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

gudtka



 

நெல்லை மாவட்டத்தின் புறநகருக்கான OCIU எனப்படும் திட்டமிட்ட குற்றங்களின் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று அதிகாலை கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அவர்கள் நெல்லை மாவட்டத்தின் சுத்தமல்லியருகேயுள்ள கரிக்கா தோப்பு மேலக்கரையில் உள்ள அந்த வீட்டைச் சோதனையிட்டனர். மேலக்கரை ரயில்வே கேட்டை ஒட்டியுள்ள அந்த வீட்டில், மூட்டை மூட்டையாக 78 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கு சிக்கியது. அதனைப் கைப்பற்றியவர்கள் அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே சந்தேகத்திற்குரிய டிரைவர் ஒருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், நுண்ணறிவுப் பிரிவினர்.

 

 

சார்ந்த செய்திகள்