Skip to main content

திருமணமான மூன்றாவது நாளே படுக்கை அறையில் உயிரிழந்து கிடந்த மணமகன்; உறவினர்கள் முற்றுகை

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

The groom who was found in his bedroom on the third day of marriage; Relatives siege

 

திருமணமான மூன்றாவது நாளே மணமகன் படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணமகனின் வீட்டார் போலீஸில் புகாரளித்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் மஞ்சுநாதன்-ராணி தம்பதி. இவர்களுடைய மகனான சரவணனுக்கு செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தைச் சேர்ந்த உறவினர் பெண்ணான சுவேதா என்பவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மாமியார் வீட்டில் விருந்துக்காக தங்கியிருந்த நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளே வீட்டு படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மணமகன் சரவணன் சடலமாக கிடந்துள்ளார்.

 

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் உயிரிழந்த வழக்கை சந்தேக வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணமகன் வீட்டார் சரவணனின் உடலை சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்த நிலையில் சரவணன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இந்த உயிரிழப்பு சம்பவத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

போலீசார் விசாரணையில் சரவணன் திருமணம் செய்து கொண்ட மணப்பெண் சுவேதா ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் இந்த திருமணத்தில் அவருக்கு சம்மதம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் மணமகன் சரவணன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உறுதியற்றவர் அல்ல எனக் கூறும் மணமகனின் பெற்றோர்கள், இது திட்டமிட்ட கொலை. மணப்பெண் வீட்டாரை விசாரிக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் எதிரொலி; 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு  

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

michaung Echo; Public holiday notification for 4 districts

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.  இதனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள 98 சதவீத ஏரிகள் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை முற்பகல் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (05/12/2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மூழ்கிய கிளியாற்று தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 Public suffering due to traffic jam

 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தப் புயல் எதிரொலி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய விட்டு கனமழை பொழிந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.  இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் மிக்ஜம் புயல் உருவாக உள்ளது. வங்கக்கடலில் இன்று  மிக்ஜம்புயல் உருவாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

புயல் எதிரொலி காரணமாக ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்று வீசு தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என செங்கல்பட்டு ஆட்சியர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.

 

அதேபோல் மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சூளேரிக்காடு, மாமல்லபுரம், கொக்கிலமேடு, புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 43 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். மழை பாதிப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தலும் கொடுத்துள்ளார்.

 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கிளியாற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெள்ளப்பெருக்கு காரணமாக சாலை மூடப்பட்டது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த அறிவுறுத்தலை மீறி சிலர் அந்த பகுதியில் ஆற்றைக் கடந்து வருகின்றனர். போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்