Skip to main content

உயிரைப் பறித்த 'பச்சை ரத்தம்'- பலி வாங்கிய மூடநம்பிக்கை

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
nn

கோவில் திருவிழாவில் ஆட்டு கிடா ரத்தம் குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கொப்பலூர் செட்டியாம்பாளையம் கிராமம். அங்கு அண்ணமார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 'பரண் கிடாய்' என்ற பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று அக்கோவிலில் பரண் கிடாய் பூஜை நடைபெற்றது. அதாவது செங்குத்தாக நிற்க வைக்கப்பட்ட கற்கள் மீது அமைக்கப்பட்ட பரண் போன்ற அமைப்பில் வைத்து பக்தர்கள் கொடுக்கப்படும் ஆட்டு கிடாய்கள் பூசாரிகளால் வெட்டப்படும்.

ஆட்டுக்கடாய்களை வெட்டும் போது வெளிப்படும் ரத்தத்தை பூசாரிகள் வாழைப்பழத்தில் பிசைந்து சாப்பிடுவது என்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நல்ல கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பூசாரியான பழனிசாமி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பூசாரிகள் நேற்று கோவிலில் பரண் கிடாய் பூஜை செய்தனர்.  இதில் 20க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிசாமி உள்ளிட்ட ஐந்து பூசாரிகளும் குடித்துள்ளனர். சிலர் வாழைப்பழத்தை ரத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர். ஆனால் சிறிது நேரத்திலேயே பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டின் பச்சை ரத்தத்தில் உள்ள நுண்ணுயிர் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

முறையற்ற தொடர்பு விவகாரத்தில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Stabbing in affair of improper relationship; One person was lose their live

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முறையற்ற தொடர்பு விவகாரத்தில் கத்திக்குத்து ஏற்பட்டு ஒருவர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை இந்திரா நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவியின் சகோதரர் விக்னேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான கெளசல்யா என்பவருடன் திருமணம் மீறிய முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்னேஷ் மற்றும் கௌசல்யா இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனால் விக்னேஷ் மாமாவான கருப்புசாமிக்கும் கௌசல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் தமிழ்ச்செல்வன் கருப்புசாமியை கத்தியால் மார்பு, தலையில் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கருப்புசாமியை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெருந்துறை போலீசார் உயிரிழந்த கருப்புசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

தாளவாடியில் தேடுதல் வேட்டை; 7 பேர் அதிரடி கைது

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Search and hunt in Thalawadi; 7 people were arrested

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளதால் கர்நாடக மது குறைந்த விலைக்கு கிடைப்பதாலும் சிலர் கர்நாடக மது பாக்கெட்களை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது தாளவாடி மலைப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தைத் தொடர்ந்து தாளவாடி மலை கிராமம் முழுவதும் போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பல்வேறு இடங்களில் கர்நாடக மாநில மதுவை வாங்கி விற்பனை செய்தவர்களை தாளவாடி போலீசார் கைது செய்தனர். இதில் பனக்கள்ளி கிராமத்தை சேர்ந்த மாதேஷ், தொட்டகாஜனூர் ஆலம்மா, மனோகரன், சிக்கள்ளி சோட்டா பாய், சிமிட்டஹள்ளி கரிமல்லு, கல்மண்டிபுரம் ராஜபாஜி, திகனாரை சித்தராஜ் என 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கர்நாடகா மது பாக்கெட் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் மீது நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக மது விற்பனை செய்வதும், போலீசார் அவர்களை கைது செய்வதும் அபராதம் கட்டிவிட்டு மீண்டும் வந்து கர்நாடக மது விற்பனை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொடர் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.