Skip to main content

கிராம சபைக் கூட்டத்தில் கேள்விகளால் அதிகாரிகளை அலற வைத்த மக்கள் பாதை இளைஞர்... வைரலாகும் வீடியோ...!!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

கிராம சபை தீர்மானங்கள் என்பது சட்ட மன்றம், பாராளுமன்ற தீர்மானங்களுக்கு இணையானது. அப்படியான கிராம சபைகளில் அரசு அதிகாரிகள் அரசுக்கு எதிரான தீர்மானங்களை தீர்மான நோட்டுகளில் எழுதாமல் மனுவாக வாங்கிக் கொண்டு சென்றுவிடுவதுடன் சரி. அதுபற்றி கேட்டால் மேல் அதிகாரிகள் உத்தரவு அப்படி.. அரசுக்கு எதிரான தீர்மானங்களை எழுதினால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அதனால் எத்தனை மனுக்கள் வந்தாலும் வாங்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுவார்கள். வழக்கமாக அரசு திட்டங்களை மட்டுமே எழுதுவது வழக்கமாகிவிட்டது.

 

grama shaba meeting...

 

அப்படித்தான் தற்போது நடந்து முடிந்த கிராம சபைக் கூட்டத்தில் தமிழகத்தில் பலமாவட்டங்களிலும் ஹைட்ரோ கார்பன் வேண்டாம், எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் அந்தந்த கிராமத்தில் உள்ள மக்களின் கருத்து கேட்க வேண்டும் என்று 500 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆனால் அதிகபட்சம் 50 கிராமங்களில் மட்டும் தான் கிராம சபை நோட்டுகளில் எழுதி இருப்பார்கள். மற்ற ஊராட்சிகளில் எழுதப்படவில்லை என்று விளக்கமாக கூறினார்கள் அதிகாரிகள்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொட்டியம்பட்டி கிராமத்தில் திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியதும் அந்த கூட்டத்தில் எழுந்த ஒரு இளைஞர்.. யாருடைய நேரத்தையும் வீணாக்க விரும்பல.. வெளிப்படையான ஊராட்சி நிர்வாகம் வேண்டும் என்பதற்காக தான் இப்ப கேள்விகள் கேட்கிறேன். யாரையும் துன்புறுத்த அல்ல..

 

grama shaba meeting...

 

கிராம சபைக் கூட்டத்திற்கு வரும் ஊராட்சி செயலர் 31 பதிவேடுகள் கொண்டு வரனும் கொண்டு வந்தாரா? பதிவேடுகள் கொண்டு வரவேண்டாம் என்று ஏதேனும் சட்டம் இருந்தால் காண்பிக்க வேண்டும். அதேபோல 16 துறை அதிகாரிகள் கலந்துக்கனும் வந்திருக்காங்களா? ஊராட்சி நடைமுறைச்சட்டம் 1994 சொல்லுது. வந்திருக்கிறார்களா? எந்ததெந்த துறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்? வட்டார வழங்கல் அலுவலர் பதில் சொல்லுங்கள்..

ஊராட்சி செயலர் அவர்களுக்க 2018 – 2019 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை.. வரவு 55 லட்சத்தி 94 ஆயிரத்தி் 660 ரூபாய். செலவு.44 லட்சத்தி இரண்டாயிரத்தி 724 ரூபாய். இந்த வரவு செலவு அறிக்கையை ஊராட்சி செயலர் இங்கே காண்பிக்க முடியுமா? மக்கள் முன்னாடி வெளிப்படையாக வரவு செலவுகளை காட்டணும். ஊராட்சி தலைவர் இப்ப தான் வந்திருக்கிறார். அவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் உங்களிடம் தான் கேள்வி கேட்க முடியும்.

2018 – 2019 ஆண்டில் மட்டும் ரூ. 39 லட்சத்தி 47 ஆயிரத்தி 532 ரூபாய் கையாடல் நடந்திருக்கிறது. பல சமூகதணிக்கையில் கண்டறியப்பட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கல..  அப்போது பதில் சொன்ன ஒரு அதிகாரி.. பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் நடந்ததால புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சமூகத் தணிக்கை நடக்கல இனி நடக்கும் அதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். (பாராளுமன்றத் தேர்தல் எப்ப நடந்தது. அதை இப்ப சொல்றார் அதிகாரி.)

மக்களுக்காக.. 2018 – 2019 ம் ஆண்டில் திருமேனி கன்மாய் கருவேலமரங்கள் அழி்க்க ரூ. 3,26,144 செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை சொல்லுது. அப்படி நடந்திருக்கிறதா என்பதை மக்கள் தெரிந்து கொள்ளுங்கள். குறுக்கிட்ட அதிகாரி.. தவாறாக எடுக்க முடியாது. கணக்குகள் இருந்தால் இப்ப காட்டிவிடலாம். என்று சொல்ல அதற்கு தான் கணக்குகளை கொண்டு வரனும் என்று கிராம சபை சட்டம் சொல்லுது என்று சொல்ல அதிகாரி கப்சிப்.. இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை மக்கள் பாதை இளைஞர் கேட்க அதிகாரிகள் ஆடிப் போனார்கள். இறுதியில் மாஜி அமைச்சரும் திருமயம் தொகுதி எம்.எல்.ஏ வுமான ரகுபதி மக்கள் பாதை இளைஞரை பாராட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகாரப் போட்டி; பேரூராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A heated argument between the district president DMK district secretary!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற பிரச்சனையில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பேரூராட்சி  தலைவருக்கும் திமுக பேரூர் செயலாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட கவுன்சிலரும் திமுக பேரூர் செயலாளருமான விஜி என்ற விஜயகுமார், பேரூராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி வருகிறது. வரும் நிதிகளை திட்டப் பணிகளாகப் பிரிப்பது தொடர்பாக யாரை கேட்டு முடிவு எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் செல்வராஜ், 'நீ வேண்டுமானால் தலைவராக இருந்து கொள். நான் எழுதித் தருகிறேன்' என்று ஆவேசமாக பேச, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் இருவரும் ஒருமையில் பேசிக்கொள்ள, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் இருவரும் சமாதானம் அடைந்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பேரூராட்சி பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி தற்போது பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வெடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'இனி ஜெட் வேகம்தான்; பலபேர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள் '- இபிஎஸ் பேச்சு

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 'AIADMK will operate at jet speed' - EPS speech

கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக இன்று அதிமுக பொதுக்குழு கூடியுள்ளது.

அதிமுகவின் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை இபிஎஸ் முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்துள்ளார்.

தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் பேசினர். அதிமுக நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள்; மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைகளை திமுக அரசு முறையாக செய்யவில்லை என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கப்படவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழ் மொழியைக் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலராக தேர்ந்தெடுத்த தொண்டர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி. அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு மிகச் சிறப்பாக எழுச்சியாக மதுரையில் நடைபெற்று முடிந்தது. அதிமுக மாநாட்டில் மதுரை நகரமே குலுங்கியது. இன்று இருக்கின்ற விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக மாநாட்டை விமர்சித்து பேசினார். அதிமுக மாநாட்டை போல எங்கள் மாநாடு இருக்காது. எடுத்துக்காட்டு மாநாடாக சேலத்தில் நடைபெற இருக்கின்ற திமுக மாநாடு நடக்குமென்று சொன்னார். அவர் சொன்னதுதான் மூன்று முறை திமுக மாநாடு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.  

அதிமுகவை விமர்சிக்கும் போதே இந்த பாதிப்பு இருக்கிறது உங்களுக்கு. எந்த கொம்பனாலும், அதிமுகவை அழிக்கவோ முடக்கவோ முடியாது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். அண்மையில் ஒரு அமைச்சருக்கு தண்டனை கிடைச்சிருக்கு. இன்னும் பல அமைச்சர்கள் தண்டனை பெற காத்துக்கொண்டிருக்கிறாரக்ள். நாடாளுமன்ற தேர்தலுக்குள்ள பலபேர் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பார்கள். சொல்லவே கூசும் அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சொல்லலாமா? சொல்லவே வாய் கூசுகிறது. சில போதை ஆசாமிகள் பசு ஈன்ற கன்றுக்குட்டியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஆட்சி இந்த ஆட்சி. எந்த ஆட்சியிலாவது இப்படி நடந்துள்ளதா?'' என்றார்.