Skip to main content

அரசின் அலட்சியம்:அரிசிக்கு வெளிமாநிலங்களில் கையேந்தப்போகும் அவலம்

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

கஜா புயலால் புரட்டி போடப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய அளவில் நெல் விளைந்த போதிலும் தமிழக அரசு கொள்முதல் செய்வதில் தாமதித்ததால் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்படப்போகிறது.

 

"தமிழகத்தின் உணவுத் தேவையில் 70 சதவிகிதத்தை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்தான். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை சேர்ந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அதை பாதுகாப்பான இடங்களில் அடுக்கிவைக்கப்பட்டு பிறகு தேவையான போது அறவைக்கு அனுப்பி பொதுவினியோக கிடங்குக்கு அனுப்புவது வழக்கம். 

 

 

 The government's negligence: Rice will be bring from external states

 

 

டெல்டா பகுதிகளில் விளைச்சல் நன்றாக இருக்கும் காலங்களில் ஏறத்தாழ 20 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும். ஆனால்  காவிரியில் நீர் வரத்து குறைவு, மழை பற்றாக்குறை, இடு பொருள் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகளாக சாகுபடியின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் நெல் உற்பத்தியும் குறைந்துவிட்டது."என்கிறார்கள் விவசாயிகள்.

 

 

" 2017 -18 ஆம் ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் மூன்று லட்சத்து 18 ஆயிரம் 148 டன்னும். திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் டன்னும். நாகை மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 694 டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

அதேபோல் நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 76 டன்னும். திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரம் டன்னும், நாகை மாவட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 260 டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட சற்று கூடுதல் என்றாலும் இயல்பான அளவுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு.உற்பத்தி நிலத்தின் அளவு ஒருபுறம் குறைந்தாலும் எஞ்சிய நெல்லை கொள்முதல் செய்வதில் காலதாமதிப்பதே குறைவுக்கு காரணம் கொள்முதல் குறைவாக இருப்பதால் வரும் காலங்களில் பொது வினியோகத் திட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்படப்போகிறது" .என்கிறார்கள் அதிகாரிகள். 

 

 

இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம், " பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் இப்போதுள்ள இருப்பை வைத்து இரண்டு மாதங்களுக்கு கூட சமாளிக்க முடியாது. பிறகு ரேஷன் அரிசியின் தட்டுப்பாடு ஏற்படும் நிலையே உள்ளது. அதனால் வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையே ஏற்படும். இதனை வருங்காலங்களில் போக்கிட ஒரே வழி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விளைகின்ற நெல்லை  அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவேண்டும். அறுவடைக்கு முன்பே கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும்.

 

rice

 

ஆனால் நமது அரசாங்கமோ கொள்முதல் சிஸ்டத்தையே மாற்றிவிட்டது. மிகவும் தாமதமாக, கடமைக்கு திறக்கின்றனர். அப்படி திறந்து கொள்முதல் செய்த மிச்ச நெல்லை சரியாக சேமித்து வைக்க போதுமான வசதிகள் கிடையாது. திறந்த வெளியில் நெல்லை அடுக்கிவைப்பதால் எடை குறைவும், தரம் குறைவும் ஏற்பட்டுவிடுகிறது. எப்போதுமே கடந்த காலங்களில் கொள்முதல் செய்தவதற்கான சாக்கு, மரங்கள், கருங்கள்ளை மூன்று மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிடுவார்கள் ஆனால் இந்த ஆண்டோ நெல் கொள்முதல் செய்யவதில் அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவே இல்லை. தேர்தலும்  இதற்கு முக்கிய காரணம்.

 

 

கொள்முதலுக்கான சாக்குகள் டெண்டர் காலதாமதமாக விடப்பட்டதால் பழைய சாக்குகளைக் கொண்டே நெல்லை பிடித்து வைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் அதிக அளவில் நெல் சேதமடைந்தது, அதோடு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கொடுனுக்கோ, கேப்புக்கோ ஏற்ற தாமதித்ததால் எலி உள்ளிட்ட ஜந்துக்கள் நாசம் செய்துவிட்டன. எனவே இந்த ஆண்டு தரமான அரிசி கிடைப்பது சிரமம் தான்.இதேநிலை தொடர்ந்து நீடித்தால் அரிசிக்கு முழுமையாக வெளி மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்." என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

நீதிமன்றம் போட்ட போடு - பதவி விலகும் ஆளுநர்?

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
the governor to resign?

நேற்று உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை ஆளுநர் எடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாகத் தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்தது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தமாக சென்று கொண்டிருந்தது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, ஆளுநர் உரை, திருக்குறள், சனாதனம் எனப் பல்வேறு சர்ச்சைகளில் ஆளுநர் சிக்கி வந்த நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.