Skip to main content

செய்ததை சொல்கிறேன் பதவியை ராஜினாமா செய்ய தயாரா ?. - அமைச்சருக்கு சவால் விட்ட எம்.எல்.ஏ.

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

 

ad


வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை என்கிற இடத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கிவருகிறது. இங்கு 14.5 கோடி ரூபாய் செலவில் 5 புதிய சிகிச்சை பிரிவுகள் மற்றும் பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் போன்றோர் கலந்துக்கொள்வர் எனக்கூறப்பட்டிருந்தது. அதோடு, இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பெயர்களை அச்சடித்த அரசு அழைப்பிதழ் சம்மந்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது.


இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 1ந்தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவமனை உள்ள ஊர் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்டதாகும். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு திமுக மத்திய மா.செவும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தகுமார் சென்றிருந்தார். வழிநெடுங்கிலும் ஆரம்பரமாக வரவேற்பு பதாகைகள், கட்அவுட்கள், வளைவுகள் என அமர்களப்படுத்தியிருந்தனர். இவைகள் அனைத்திலும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள் மட்டுமே இருந்தது. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் படங்களோ, பெயர்களோ கிடையாது. தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் நந்தகுமார் பெயரும், படமும் கிடையாது.

 

v

 

நிகழ்ச்சிக்கு வந்தவர் எதற்காக இப்படியொரு ஆடம்பர விழா எனக்கேள்வி எழுப்பினார். தெரியாம நடந்துடுச்சி விடுங்க என வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, எம்.எல்.ஏ நந்தகுமாரை கையை பிடித்துக்கொண்டு சமாதானம் செய்தார். அரசு விழா நடக்குது, என் தொகுதியில் நடக்கும் விழாவில் எம்.எல்.ஏ என்கிற முறையில் எனக்கு என்ன மரியாதை செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதனால் அமைச்சர் சங்கடத்தில் நெளிந்தார். இதனால் விழாவை புறக்கணித்துவிட்டு நந்தகுமார் கிளம்பிவிட்டார்.


அவர் சென்றபின் நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம், இந்த தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் இந்த மருத்துவமனைக்கு சிறு துரும்பும் கிள்ளி போடாதவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் பத்து பைசா இந்த மருத்துவமனைக்காக செலவு செய்யாத எம்.எல்.ஏ நந்தகுமார், விளம்பரத்துக்காக இங்கு வந்து பேசிவிட்டு சென்றுள்ளார் என பேட்டியளித்துவிட்டு சென்றார்.


இந்த தகவல் நந்தகுமாரை எட்டியதும் கோபமாகியுள்ளார். நான் அந்த மருத்தவமனைக்கு எதுவும் செய்யலன்னு இவர் எப்படி சொல்லலாம், நான் செய்ததை ஆதாரத்தோடு சொல்கிறேன்.   அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாரா என சவால் விட்டுள்ளார் என்றார்கள் திமுக தரப்பில்.


இதுப்பற்றி நந்தகுமார் எம்.எல்.ஏவிடம் நாம் கேட்டபோது, என் தொகுதிக்கு உட்பட்ட அடுக்கம்பாறை என்கிற ஊரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 27 லட்ச ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பொதுமக்கள் ஓய்வு அறை கட்டி தந்துள்ளேன், இதனை சில மாதங்களுக்கு முன்பு தான் மருத்துவர்களோடு சேர்ந்து திறந்துவைத்தேன். இதுப்பற்றி ஒன்றும் அறியாத அமைச்சர் சவால் விட்டுள்ளார். இதுப்போல் இன்னும் சிலவற்றையும் செய்துள்ளேன், அவைகளை பட்டியலிடுகிறேன், நான் எதுவும் செய்யவில்லை எனச்சொன்ன மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா எனக்கேட்டவர், மாவட்டத்தில் என்ன நடக்குதுன்னே தெரியாமா, வாய்ல வந்ததையெல்லாம் பதவியில் இருப்பவர் பேசக்கூடாது என்றார் சூடாக.


கேள்வி கேட்காமல் ஒளிப்பரப்ப ஆளும்கட்சிக்கு சாதகமாக மீடியாக்கள் உள்ளது என்பதற்காக வாயில் வந்ததையெல்லாம் பேசிவிட்டு இப்போது மாட்டிக்கொண்டார் மந்திரி.

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.