Skip to main content

“உ.பி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” - விசிக ந.செல்லத்துரை!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

UP government should be dismiss

 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை அவரின் பெற்றோரிடமும்கூட கொடுக்காமல் காவல்துறையே தகனம் செய்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் முகமது யூசுப், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, கவுதம சன்னா, வன்னி அரசு, ஆளூர் ஷாநவாஸ், இளஞ்சேகுவேரா, மாவட்டச் செயலாளர்கள் இரா.செல்வம் பெ.ரவிசங்கர் வி.கோ.ஆதவன், பு.அன்புச்செழியன் ச.அம்பேத்வளவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நம்மிடம் பேசிய வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, "ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அதன்பின், அப்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்கிறார்கள். இந்த விவகாரம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியின் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், அப்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து இருக்கிறார் எனத் தெரிவிக்கிறார். இது தடையத்தையும் உண்மையையும் அழிக்கும் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தச் சமயத்தில் அந்த மாநிலத்தின் முதல்வர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், நிவாரண நிதி எதுவும் வழங்காமல், அதை நியாயப்படுத்தும் வகையில் ‘இது அரசைக் கலங்கப்படுத்தக்கூடிய போராட்டமாகப் பார்க்கிறேன் என்றார். மேலும், இந்தப் போராட்டம் தொடர்ந்தால், வழக்குகள் தொடரப்படும்’ என ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். 

 

Ad

 

இதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஐ.நா.வே நேரடியாகத் தலையிட்டு இந்த விஷயத்தைக் கண்டித்த பிறகும், பிரதமர் மோடி கண்டனத்தையோ வருத்ததையோ தெரிவிக்காதது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஆகவே பிரதமர் மோடியையும் வி.சி.க கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு ஆறுதல் சொல்லவந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தள்ளிவிட்டு அச்சுறுத்துகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடம் போலீஸார் நடந்துகொண்ட விதத்தையும் வி.சி.க கண்டிக்கிறது. மனித உரிமை மீறலில் காவல்துறை ஈடுபடுகிறது. சிறுபான்மை மக்களுக்கும் தலித் பெண்களுக்கும் தலித்களுக்கும் பாதுகாப்பு தரமுடியாத, ஜனநாயக விரோத ஆட்சியை உடனடியாக 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மோடி அரசு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என வி.சி.க வலியுறுத்துகிறது.” எனத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.