Skip to main content

கூச்சல் போட்டு கதறிய கணவர்... அரசுப் பள்ளி ஹெச்.எம். மற்றும் ஆசிரியரை இடமாற்றம் செய்த உயர் அதிகாரி!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

Government School H.M. And teacher transfer ..! Regional Education Officer action ..!

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே இலந்தைவாரியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், அணைப்பட்டியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரும், பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரும் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

அந்தப் பெண் தலைமை ஆசிரியர், தலைவாசல் மும்முடியைச் சேர்ந்தவர். அந்த ஊரில் இருந்து பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால், தினமும் அவர், உடன் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியருடன் அவருடைய மோட்டார் சைக்கிளிலேயே பள்ளிக்குச் சென்று விடுவாராம். 

 

இதில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. அடிக்கடி அவர்கள் வகுப்பறையிலேயே தனிமையில் இருப்பதாக ஊர் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி, உள்பக்கமாக பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருந்துள்ளனர். 

 

இதை அறிந்த கிராம மக்கள், பெண் தலைமை ஆசிரியரின் கணவருக்குத் தகவல் அளித்துள்ளனர். அவர் பள்ளிக்கு வந்து, கதவைத் தட்டி கூச்சல் போட்டார். பெரும் விசுவரூபம் எடுத்த இந்த விவகாரம் குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நேரில் விசாரணை நடத்தினார். 

 

இதையடுத்து, பெண் தலைமை ஆசிரியரை வரகூர் அரசு தொடக்கப்பள்ளிக்கும், பகுதி நேர ஆசிரியரை திட்டச்சேரி பள்ளிக்கும் இடமாற்றம் செய்து வட்டாரக் கல்வி அலுவலர் அசோகன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம், சேலம் மாவட்ட தொடக்கக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Education of poor students questioned!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தன்னார்வல நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH - NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது. 

ஆனால், 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றது. அங்கு இலவச கல்வி பயின்று வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது. மேலும், பதினாறு கோடி மதிப்பிலான பள்ளியின் சொத்தை ஆலிவர் சாலமன் என்பவருடன் இணைந்து மேரு மில்லர் சட்ட விரோதமாக விற்று ஊழல் செய்துள்ளார். 

இதனை வன்மையாக கண்டித்து பத்திரிக்கையாளர் சிவராமன், மேரு மில்லரை பணி நீக்கம் செய்ய வேண்டி ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புதிய செயலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், கேள்விக்குறியாக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் கல்விநலன் காக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.