Skip to main content

மாணவர்களுக்கு உணவுடன் கூடிய சிறப்பு வகுப்பு நடத்தி அசத்தும் அரசுப்பள்ளி!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே  சி.முட்லூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 632 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பத்தாம் வகுப்பில் 75 மாணவ, மாணவிகளும், 11ம் வகுப்பில் 104 மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 78 மாணவ, மாணவிகளும் மொத்தம் 257 பேர் அரசு பொதுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.

 

Government school conducts special class for students!

 



அரசு பள்ளி என்றாலே மாணவ, மாணவிகளுக்குச் சரியாகப் பாடம் நடத்தமாட்டார்கள் என்பதுதான் பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. அதே நேரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் 80 சதவிகிதம் பேர் அவர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்பது கிடையாது என்ற குற்றச்சாட்டையும் மறுக்க முடியாது. இதனை அரசு பள்ளி ஆசிரியர்களும் ஏற்றுகொள்கிறார்கள்.

இந்த பள்ளியில் பயிலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் அரசு பொது தேர்வு எழுதி வருகிறார்கள். இந்தநிலையில் மாணவர்கள் அனைவரும் கிராம புறங்களில் இருந்து வருவதால் அவர்களின் வீட்டு சூழல் அரசு தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தி படிக்கமுடியாத சூழல் இருக்கும் என கருதி இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கூட்டுமுயற்சியில் மாணவர்களுக்கு தேர்வு குறித்து தனி வகுப்பு நடத்துகின்றனர். அது மட்டும் இல்லாமல் வகுப்பு இடைவேலைகளில் மாணவர்களுக்கு சுண்டல் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இரவு 8 மணி வரை பள்ளியில் அமர்ந்து படிப்பதால் இரவு சாப்பாட்டையும் பள்ளியிலே வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

 


சிறப்பு வகுப்பில் ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் அனைத்து பாட ஆசிரியர்களும் மாணவர்களுடன் இருந்து மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாடம் குறித்த சந்தேகங்களைத் தலைமை விளக்கமளிக்கின்றனர்.

மேலும் மாணவ, மாணவிகள் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வருவதால் இரவு நேரத்தில் பேருந்து கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்பதால் ஆசிரியர்களின் கூட்டுமுயற்சியால் அவர்களின்  நெருங்கிய நண்பர்களின்  உதவியால் வாகனத்தை ஏற்பாடு செய்து அதில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் தேர்வு நேரத்தில் சிறப்பு வகுப்புகள், சிற்றுண்டி, இரவு உணவு, பாதுகாப்பான வாகன வசதி என அனைத்திற்கும் ஏற்பாடு செய்துள்ள  பள்ளியின் ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள்,  அவர்களின் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதே போல் தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் செய்தால் மாணவர்களின் வாழ்க்கை வெற்றியாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.