Skip to main content

அரசு வேலை ஆசை; ரூ. 18 லட்சம் மோசடி

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Government job desire! Rs. 18 lakh fraud!

 

விழுப்புரம் அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராஜ். இவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், விழுப்புரம் மாவட்டம் ஏழு செம்பொன் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தற்போது சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வருகிறார். அவருடன் அவரது நண்பர், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இருவரும் கடந்த 2017ல் அறிமுகமானார்கள். அவர்கள் பல்வேறு நபர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் அதேபோல் எங்களுக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள்.

 

இதில் சம்பந்தப்பட்ட சக்திவேல் என்பவர் எனக்கு உறவினர் என்பதால் அவர்கள் கூறியதை நாங்கள் முழுவதுமாக நம்பினோம். இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தேவி மகாலிங்கம், சுந்தரவேல் ஆகியோர் வாடகை கார் எடுத்துக் கொண்டு சக்திவேல் அழைத்ததின் பேரில் 2017ம் ஆண்டு சென்னை நங்கநல்லூருக்கு சென்றோம். அங்கு என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிகுமார் என்பவர் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். அங்கு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ரயில்வே துறையில் எங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர். அதன் பெயரில் நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்து 18 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை தவணை முறையில் அவர்களிடம் கொடுத்தோம்.

 

பணத்தைப் பெற்றுக் கொண்ட சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் எங்களிடம் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பலமுறை எங்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க கூறி வற்புறுத்தினோம். அவர்கள் மேலும் காலம் தாழ்த்தி வந்ததால் நாங்கள் கொடுத்த பணத்தையாவது திருப்பித் தருமாறு கேட்டு பலமுறை அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பணத்தை தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலைக்காக கொடுத்த பணத்தை அவர்களிடமிருந்து பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஹரிக்குமார், பல்லாவரத்தைச் சேர்ந்த சக்திவேல், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், ஹரிகுமார், சரவணன், ஆகியோரை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.