Skip to main content

அரசு மருத்துவர்கள் சம்பளம் கேட்டு போராட்டம்

 

Government doctors are strikingling g for salary

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவம் இல்லாத ஊழியர்கள் என 1800க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாத ஊதியம் வழங்கவில்லை என சனிக்கிழமை மருத்துவமனை வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மனோகர், பழனிவேல், ரவி, மருத்துவர் பாலாஜி சாமிநாதன், மருத்துவர் ராமநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து தமிழக அரசு உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். தமிழக அரசு இன்னும் காலதாமதம் ஏற்படுத்தினால் போராட்டம் தீவிரமடையும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு மாதமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் இல்லாத ஊழியர்களுக்கு தங்குதடையின்றி சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !