Skip to main content

தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டில் அரசு பஸ் அனுமதி மறுப்பு பயணிகள் அவஸ்தை...

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Government bus permit denial on National Highway vikiravandi tollgate


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கட்டணம் செலுத்திவிட்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று சிதம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. 

 


விக்கிரவாண்டி டோல்கேட் அருகே பிற்பகல் 3 மணியளவில் கடக்க முயன்றபோது சுங்கச்சாவடியில் பணி செய்த ஊழியர்கள் பஸ்சை நிறுத்தி, கட்டணம் செலுத்தினால்தான் பஸ்சை இயக்க முடியும் என்று கறாராக கூறிவிட்டனர். அப்போது அவர்கள் மேலும் கூறும்போது, சிதம்பரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம், பல லட்சம் ரூபாய் பாக்கி  வைத்துள்ளது. 

 


அந்தப் பணத்தை முழுவதும் செலுத்தினால்தான் பஸ்சை இயக்க முடியும் என்று பஸ்சை விடவில்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கி நீண்ட நேரம்  காத்திருந்தனர். பஸ் டிரைவர் கண்டெக்டர் இருவரும் நீண்ட நேரம் சுங்கச்சாவடி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் இது குறித்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஒருவழியாக பஸ்சை சுங்கச்சாவடியைவிட்டு அனுப்பி வைத்தனர்.

 


இதனால் பஸ் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அரசு போக்குவரத்துக் கழகம் டோல்கேட் கட்டணம் கூட செலுத்த முடியாமல் பல லட்சம் பாக்கி வைத்துள்ளது வியப்பாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசும் அதிகாரிகளும் இதுபோன்று தடங்கல்கள் ஏற்படாமல் சரி செய்வார்களா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Cancellation of fee increase at toll booths

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Fee increase in toll booths
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.