Knife

சென்னை எண்ணூரை அடுத்த எர்ணாவூர் எர்ணீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவியரசன். 22 வயதான அவர், வெல்டிங் வேலை செய்து வருகிறார். திருவொற்றியூரைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவருடன் கவியரசன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். அவ்வப்போது சந்தித்து இருவரும் பேசிக்கொள்வது வழக்கம்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இதேபோல் அந்த பெண்ணை எண்ணூர் ரெயில் நிலையம் அருகே வரவழைத்து சம்பவத்தன்று பேசியுள்ளார். அப்போது அடிக்கடி செல்போன்ல யாருக்கிட்ட பேசுற என்று கவியரசன் கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,இதில் ஆத்திரம் அடைந்த கவியரசன், தனது அப்பெண்ணின் முகத்தில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.பின்னர் படுகாயம் அடைந்த அப்பெண்ணை அவரே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இதுபற்றி எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிந்துள்ளது. போலீசார் அப்பெண் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு விசாரித்துள்ளனர். கவியரசன் என்பவர்தான் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கவியரசனிடம் விசாரித்தனர். அப்போது அவர், “நாங்கள் 2 பேரும் எண்ணூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கோவில் அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த வட மாநில வாலிபர்கள் சிலர் எனது காதலியின் முகத்தில் கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர்” என்றார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கவியரசன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை துருவி துருவி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

அப்போது அவர், “நான் அவரை காதலித்தேன். அவரும் என்னை காதலிப்பதாக கூறினார். இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக்கொள்வோம். இந்த நிலையில் வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாக கூறியதால் ஆத்திரத்தில் நான், அவரின் முகத்தில் கத்தியால் குத்தி விட்டேன். இது தெரிந்தால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் வடமாநில வாலிபர்கள் கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்துச்சென்றதாக நாடகம் ஆடினேன்” என ஒப்புக்கொண்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கவியரசனை கைது செய்தனர்.