Skip to main content

''பாவம் அந்த காயத்ரி ரகுராம்.. திருச்சி சூர்யாகிட்ட பேசினேன்..'' - வரிச்சூர் செல்வம் பேட்டி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

Gayatri Raghuram... I spoke to Trichy Surya"-Varichiyur Selvam interview

 

எப்பொழுதும் கிலோ கணக்கில் நகைகளுடன் சுற்றித்திரியும் வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''என் மீது ஐந்து ஸ்டேஷன்களில் ஒரே நாளில் 22 கேஸ் போடுகிறார்கள். எதற்கென்றே தெரியவில்லை. கொடைக்கானல் டூர் போனேன். அங்க ஒரு குண்டாஸ். வாழ்நாட்களில் ரொம்ப கஷ்டப்பட்டாச்சு. சாப்பாட்டுக்குக் கூட இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டாச்சு. வடிவேல் ஒரு படத்துல 'நானும் ரவுடிதான்' என்பார். அதே மாதிரி நான் ரவுடி இல்லைன்னு சொல்றேன். இயற்கையிலேயே எனக்கு சம்பாத்தியம் இருக்கிறது. நல்லா காசு வைத்திருக்கிறேன். நான் ஏன் போய் ரவுடிசம் பண்ணனும். யார்கிட்டயும் காசு வாங்க வேண்டும் என்று தேவையில்லை. நான் எப்பவுமே ட்ரெஸ்ஸிங் இப்படித்தான் போடுவேன். என்கிட்ட நிறைய வாட்ச் இருக்கு. ஷூ, கண்ணாடி நிறைய இருக்கு. நான் ஒரு ஜாலியானவன். என்னை ரவுடி என்று சொல்வதை முதலில் நிப்பாட்டுங்க.

 

என்னைக்காவது யார்கிட்டயாவது போய் நான் மிரட்டி ஒரு பத்து ரூபாய் வாங்கிருக்கேன்னு சொல்லுங்க. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கேன்னு என்னைக்காவது சொல்லி இருக்காங்களா? நான் பார்க் உள்ள போவேன். 100 பேரு என் கூட போட்டோ எடுப்பாங்க. அங்கிட்டு ஒரு நட நடப்பேன். இங்கிட்டு ஒரு நட நடப்பேன். ஹோட்டலில் போய் சாப்பிடுவேன். நான் ஜாலியா தான் இருக்கேன். அப்புறம் ஏன் என்னை தாதா, ரவுடின்னு போட்டு சித்திரவதை படுத்துகிறீர்கள். என்னை ஜாலிமேன்னு போடுங்க. ஜோக்கர்னு கூட போடுங்க, நான் ஏற்றுக்கொள்கிறேன், தப்பு கிடையாது. ரவுடி என்பதை தயவு செய்து எடுத்து விடுங்கள்.

 

நான் காதல் செய்து கொண்டிருக்கிறேன். ஜாலியா இருக்கிறேன். எல்லாத்தையும் காதலிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். இந்த மக்கள் எல்லாத்தையும் காதலிக்கிறேன். நான் ஒரு பப்புக்கு போறேன். நான்கு நடிகர்கள் வந்து என்கூட போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பாவம் அந்த காயத்ரி ரகுராம். ஒரு நாள்  ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ், ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். வந்தபோது என் கூட போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். அப்புறம் திருச்சி சூர்யாகிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டுவிட்டேன் என்றார். ஏப்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. போட்டோ தான் எடுத்தது. இது குற்றமாய்யா. அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சாமி. அரசியல்வாதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.