Skip to main content

வெற்றியைக் கொண்டாடிய கருடன் படக்குழு (படங்கள்)

Published on 14/06/2024 | Edited on 14/06/2024

 

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அண்மையில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கருடன்  பட சாக்ஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ சூரி, சசிகுமார், டைரக்டர்  துரை செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்,  டைரக்டர்கள் வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.குமார், ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 படங்கள் : எஸ்.பி.சுந்தர் 

சார்ந்த செய்திகள்

 

Next Story

"மீண்டும் வெற்றி பெற்ற தோழர்” - சசிகுமார் வாழ்த்து 

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
sasikumar wishes su venkatesan mp

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசனுக்கு இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற தோழர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்” என்றார். மேலும் சு.வெங்கடேசனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சு.வெங்கடேசன் மொத்தம் 4,30,323 வாக்குகள் பெற்றிருந்தார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை விட 2,09,409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக மதுரை தொகுதியில் பெற்றுள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு அதே தொகுதியில் 4,47,075 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 1,34,119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

புகார் எதிரொலி; அரசு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட நாடோடி பழங்குடியினர்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
garudan cuddalore theater tribal people issue

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம், நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாடோடிகள் பழங்குடியின பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் மாவட்டம் மாவட்டமாக பாத்திரம் விற்கும் வேலை செய்து வரும் நிலையில் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் கடலூரில் உள்ள 'நியூ சினிமா' திரையரங்கில்  'கருடன்' திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர். ஆனால் காலை 8 மணி முதலே காத்திருந்த போதும் இறுதிவரை திரையரங்கில் டிக்கெட் தர மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எல்லோருக்கும் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தங்களுக்கு ஏன் டிக்கெட் கொடுக்கப்படவில்லை என கேட்டதற்கு தியேட்டர் நிர்வாகம் சரியான பதில் கொடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர்கள் இது குறித்து காவல் நலையத்தில் புகார் கொடுத்தார்கள். அந்தப் புகாரில் தமிழகத்தில் பல இடங்களில் பல மாவட்டங்களில் உள்ள பல திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு மட்டும் எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்கள். இதற்கான காரணம் என்ன எனத் தெரிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இதையடுத்து அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க காவலர்கள் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் பலராமன் அந்த மக்களை அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று, படம் பார்க்க ஏற்பாடு செய்தார். பின்பு டிக்கெட் வாங்கி தற்போது அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்து ரசித்தனர். இதே போல் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல பட வெளியீட்டின் போது, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் சாலையோரம் பாசிமணி விற்கும் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து திரையரங்கம் உள்ளே சென்ற போது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்தத் திரையரங்க உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.