Skip to main content

காவிரியில் நீர் திறப்பு மேலும் குறைப்பு; ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையால் அதிர்ச்சி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

A further reduction in the amount of water released to Tamil Nadu; Shocked by the recommendation of the Cauvery Commission

 

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

முன்னதாக அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்திலும், காவிரி மேலாண்மை கூட்டத்திலும் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முதலில் 12,000 கன அடி திறக்க சொன்னீர்கள் இப்பொழுது 5,000 கன அடி நீர் திறந்துவிட சொல்கிறார்கள். ஏன் இப்படி குறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. காவிரி ஆணையமும், ஒழுங்காற்று குழுவும் 5,000 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. காவிரி ஒழுங்காற்று குழு முறையாக நடக்கிறதா அல்லது கர்நாடகாவிற்கு அனுசரணையாக நடக்கிறதா? என்று மத்திய அமைச்சரிடம் கேட்டேன்'' என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை 5,000 கன அடியிலிருந்து மேலும் குறைக்கப்பட்டு நாளை மறுநாள் முதல் 3000 கன அடியாக திறந்து விட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mild earthquake in Chengalpattu

செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

செங்கல்பட்டு பகுதியை மையமாக கொண்டு மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் தற்போது கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக வடமாநிலங்களில் ஏற்பட்டிருந்த நில அதிர்வுகள் தற்போது, தென்மாநிலங்களான தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, கர்நாடகாவின் விஜயபுரா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

Next Story

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு; சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவு!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Gauri Lankesh case and karnataka Cm siddaramaiah Order to set up a special court!

 

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான எம்.எம்.கல்புர்கி கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி தார்வாட்டில் உள்ள அவரது வீட்டில் அவரை சில அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மிக மோசமான இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு அப்போதைய கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சி.ஐ.டி. அதிகாரிகள் இதற்கு முன்னர் கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புகர்கி ஆகியோரின் கொலை வழக்குகளோடு கவுரி லங்கேஷின் கொலைவழக்கும் ஒத்துப்போயுள்ளதாகக் கூறப்பட்டது. 

 

கவுரி லங்கேஷ் கொலை சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்து யுவசேனா அமைப்பின் நிர்வாகி நவீன்குமார் (37) என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்த சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், இந்த வழக்கு மெதுவாக நடப்பதாகவும், சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து முழு நேர நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, முதல்வர் சித்தராமையா நேற்று (06-12-23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், ‘எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் பேரில் இருவரது கொலை வழக்குகளையும் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இரு வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், முழு நேர நீதிபதியை நியமிக்கவும் சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.