Skip to main content

முகூர்த்த நாள் எதிரொலியாக அதிகரித்த பழம், காய்கறி விலைகள்; 200 ரூபாய்க்கு எகிறிய இஞ்சி

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Fruit, vegetable prices rise on Mukurtha day; ginger jumps by Rs 200

 

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், ஊட்டி, தாளவாடி, ஆந்திரா, எடப்பாடி, மேட்டுப்பாளையம், பெங்களூர், தாராபுரம் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு வழக்கமாக 75 முதல் 90 டன் வரை காய்கறிகள் வரத்தாகி வரும். ஆனால் பரவலாக மழை பெய்ததன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு வெறும் 50 டன் காய்கறிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. அதே சமயம் தொடர் முகூர்த்தம் வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து அதன் எதிரொலியாக விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 

 

இன்று வ. உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு: கத்திரிக்காய் - 80 - 90, பீர்க்கங்காய் - 60, புடலங்காய் - 50, தக்காளி - 35 - 40, பெரிய வெங்காயம் - 30, சின்ன வெங்காயம் - 80, பீன்ஸ் - 80, கேரட் - 65, பாகற்காய் - 60, முட்டைக்கோஸ் - 20, காலிபிளவர் - 30, குடைமிளகாய் - 60, முருங்கைக்காய் - 80, பீட்ரூட் - 55, வெண்டைக்காய் - 70, முள்ளங்கி - 40, சுரக்காய் - 15, சவ்சவ் - 20,  பட்ட அவரை - 80, கருப்பு அவரை - 100. இஞ்சி வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்கப்படுகிறது.

 

ஈரோடு மார்க்கெட்டிற்கு பெங்களூர், மகாராஷ்ட்ரா, ஊட்டி கொடைக்கானல், ஆந்திரா, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து பழங்கள் வரத்தாகி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 30 டன் வரை பழங்கள் வரத்தாகி வந்தன. தற்போது வரத்து குறைவால் இன்று 10 டன் பழங்கள் மட்டுமே வரத்தாகி இருந்தன. இதே போல் தொடர் முகூர்த்தம் காரணமாகவும் வரத்து குறைவு காரணமாகவும் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பழங்கள் விலையும் சற்று உயர்ந்துள்ளது.

 

இன்று விற்கப்பட்ட பழங்களின் விலை கிலோவில் வருமாறு: கொய்யா - 50, செந்தூரம் மாம்பழம் - 50, ஜில் பசந்த் மாம்பழம் - 70, ருமேனியா மாம்பழம் - 70,  கோப்பூர் அல்வா மாம்பழம் - 60, இமாம் பசந்து மாம்பழம் - 50, மாதுளை பழம் - 120, ஆப்பிள் - 200, ஆஸ்திரேலியா ஆரஞ்சு - 120, சாத்துக்குடி - 80, பன்னீர் திராட்சை - 120, சின்ன நாவல் பழம் - 240, பெரிய நாவல் பழம் - 360.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காந்தி மார்க்கெட் மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகம் திறப்பு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Opening of Trichy Gandhi Market Fish and Meat Store Mall

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை இன்று (08.02.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.  

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி. திவ்யா, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர்கள் மதிவாணன், ஜெய நிர்மலா, முக்கிய பிரமுகர் வைரமணி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story

சென்னையில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Vegetation sales start in mobile vehicles in Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதித்து காய்கறிகளைக் கொண்டு வரும் லாரிகள் சென்னை நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மழை பாதித்த இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.