Skip to main content

போதை படுத்தும் பாடு; நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

friends people who incident her friend while intoxicated

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது சிவக்கொழுந்து. இவர் கடந்த 29ஆம் தேதி இரவு கடாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அவரது நிலையைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததை கண்ட அவரது குடும்பத்தினர் அவரைப் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் சிவக்கொழுந்து.

 

விபத்தில் சிக்கிக் கிடந்தது குறித்து சிவக்கொழுந்து மனைவி எழிலரசி தனது கணவர் காடாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார் அந்த நேரத்தில் அவர் எப்படி விபத்தில் சிக்கினார் அவரது உடலில் உள்ள காயங்கள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்கொழுந்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லாஹ், இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் சிவக்கொழுந்து சாலை விபத்தில் காயமடையவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளதாக கண்டுபிடித்தனர். 

 

மேலும், சிவக்கொழுந்து அவரது நண்பகள் காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த கார்மேகம், பொக்லின் ஆபரேட்டர் அபினேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29ஆம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் சென்று அமர்ந்து மது அருந்தி உள்ளனர் அப்போது மது சாப்பிடுவதற்கு சைடிஸ்ஸாக கறி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிடும் போது மூவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்மேகம் அபினேஷ் இருவரும் சிவக்கொழுந்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் சிவக்கொழுந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் சிவக்கொழுந்துவை கொண்டு வந்து விபத்தில் காயம் அடைந்ததாக காட்டுவதற்காக சாலையில் போட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை  கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. கொலையில் சம்பந்தப்பட்ட கார்த்திகேயன், அபினேஷ், கார்மேகம், ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் கார்மேகம் அபினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மது போதை நண்பனை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.