Skip to main content

புதுமணத் தம்பதியருக்கு வெங்காயத்தைப் பரிசாக அளித்த நண்பர்கள்!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

Friends gifted onions married couples

 
வட மாநிலங்களில் தற்போது பொழிந்து வரும் கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், வெங்காய இறக்குமதியும் இல்லாததால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


தற்போது சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதியருக்கு வெங்காயத்தைப் பரிசாக அளித்துள்ளனர் அவரது நண்பர்கள்.
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கம்மாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும், சீர்காழியைச் சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்குப் பல்வேறு பரிசுப் பொருட்களை, அன்பளிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.


இந்த நிலையில், மணமகனின் நண்பர்கள் வெங்காயத்தைப் பரிசுப் பொருளாக பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து மணமக்களுக்கு வழங்கினர். வெங்காயப் பரிசுப்பெட்டி வழங்கிய நண்பர்கள் அதை அப்போதே பிரித்துப் பார்க்க வேண்டும் என்று மணமக்களிடம் வலியுறுத்தினர். பரிசுப் பெட்டியைப் பிரித்துப் பார்த்ததில் அதில் இரண்டு கிலோ வெங்காயம் இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இதை மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் பார்த்து ரசித்தனர்.  
 

cnc

 

இதுகுறித்து மணமகனின் நண்பர்கள் கூறும்போது, “திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சமையலுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை தற்போது 100 ரூபாய் முதல்  150 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் வெங்காய விலை உயர்வை மணமக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவும், வெங்காயத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் விலை உயர்ந்த வெங்காயத்தைப் பரிசாக வழங்கியுள்ளோம்” என்றனர். மணமக்களுக்கு வெங்காயப் பரிசுப்பெட்டி வழங்கிய நிகழ்வு சிலருக்கு நகைச்சுவையாகவும், சிலருக்கு வெங்காய விலை உயர்வைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்டாலே கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டு 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

'Onion price that makes you cry'- Pmk Ramadoss alleges



வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு விலை அதிகரித்து விட்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

 

கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.25 - 30 என்ற அளவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களில் தான் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

அடுத்த சில நாட்களில் தீப ஒளித் திருநாள் உள்ளிட்ட திருவிழாக்கள் வரவிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை மேலும், மேலும் உயருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ. 200-ஐ தாண்டியதைப் போன்று  வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ. 150-ஐத் தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. இந்த விலை உயர்வில் இருந்து மக்களைக் காக்கும் மாபெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

 

bb

 

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாகச் சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்குக் கொண்டு வருவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

நாடு முழுவதும்  வெங்காயத்தின்  விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வெங்காயம் முழுவதையும் சந்தைக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன்,  வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்.

 

வெங்காயத்தின் விலை நிலையில்லாமல் எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்குத் தாழ்வதற்குக் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான். எனவே, தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

நடவு வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Increase in price of planting onions

 

சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை விண்ணைத் தொட்ட நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது.

 

ஏற்கனவே முந்தைய காலகட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்திருந்தது. தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெங்காயத்தின் விலை அதிகரித்திருந்தது. திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் பரிசு வழங்கும் அளவுக்கு அன்றைய காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து இருந்தது.

 

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் நடவு பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை 50 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வியாபாரிகளிடம் இருந்து பழைய சின்ன வெங்காயத்தை வாங்கி நடவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் பழைய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.