Skip to main content

மாற்றுத்திறனாளிகள் திட்டங்களில் முறைகேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Abuse in the programs of the disabled! Request to take action !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், ஒட்டன்சத்திரம் வட்டார மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். 


இவர் தலைமையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் குழுக்களின் சார்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கடன்கள் பெற்று வந்துள்ளனர். இதற்கான மாதாந்திர கடன் தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளனர். இந்த சுய உதவிக்குழு பயிற்றுநராக மகுடீஸ்வரி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், குழுக்களின் மூலம் கட்டப்படும் கடன் தொகையை வரவு வைக்காமல் கட்டிய பணத்தை விட குறைந்த கணக்கை காட்டி ரசீது கொடுத்துள்ளார். 

 

இதனால் ஜனவரி 5ம் தேதி கார்த்திகேயன் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கடன் தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடித்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு முழுமையான ரசீது தராமல் உரிய பதில் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஒட்டன்சத்திரம் வட்டார மேலாளர் பிரியா என்பவரிடம் பல முறை புகார் செய்துள்ளார். ஆனால் இது குறித்து வட்டார மேலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் புகார் செய்ததால் இவர்களுக்கு  வரவேண்டிய எந்த ஒரு அரசும் நலத்திட்டங்களும் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை, வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர்  குழுக்களின் சார்பாக கொடுக்கப்படும் கடன் விண்ணப்பங்களை தர மதிப்பீடு செய்யாமல் நிராகரித்து கையூட்டு கேட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். மேலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாக இருக்கும் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்காமல் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசின் நலத்திட்டங்களில் முறைகேடு செய்து வருவதாக கூறப்படுகிறது. 


ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் துவங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித செயல்பாட்டிலும் இல்லை. எனவே, இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.