Skip to main content

நான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்!!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காணாமல் போன நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த கொலை சம்பவத்தில்  பெற்ற தாயே மகனை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

Four year old boy attack with stone...police arrest mother


தேனி மாவட்டம் கோம்பை அடுத்த உத்தமபாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கீதா. இருவருக்கும் திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஹரிஷ் என்ற மகன் இருக்கிறான். கீதாவின் பெற்றோர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தான் ஹரிஷ். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஹரிஷ் வீடு திரும்பாததால் கீதாவின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் மகனை தேடி பார்த்துவிட்டு கடைசியில் கிடைக்கவில்லை என்பதனால் தேனி மாவட்டம் கோம்பை காவல்துறையில் புகார் அளித்தனர்.

 

Four year old boy attack with stone...police arrest mother

 

Four year old boy attack with stone...police arrest mother

இந்தநிலையில் அந்த ஊரில் ஒதுக்குபுறமாக உள்ள மயானம் அருகே நான்கு வயது சிறுவன் ஹரிஷ் முகத்தில் கற்களால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக போலீசார் விசாரித்தபொழுதும் மர்மம் விளங்காமலே இருந்தது. ஆனால் இறுதியில் தாய் கீதாவே கொலைக்கு உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Four year old boy attack with stone...police arrest mother


கீதா கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில் அவருக்கும் அதேபகுதியை சேர்ந்த உதயன் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு முதல் கணவருக்கு பிறந்த மகனான ஹரிஷ் தடையாக இருப்பான் என கீதா தனது தங்கையான புவனேஸ்வரியிடம் கூறியநிலையில் இதை புவனேஸ்வரி அவரது கணவனான கார்த்தியிடம் கூறியுள்ளார். இதனால் சிறுவன் ஹரிஷை கொலைசெய்ய திட்டமிட்ட கார்த்திக் அவனை மயானத்திற்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக்கொலை செய்துள்ளான்.

Four year old boy attack with stone...police arrest mother


கொலை செய்யும் போது யாரேனும் மயானத்திற்குள் வருகிறார்களா என தகவல் கொடுக்க சித்தி புவனேஸ்வரி வெளியே காவல்காத்து நின்றுள்ளார். இப்படி திட்டமிட்டு கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதவர்கள் போல் காவல்நிலையத்தில் சிறுவனை காணவில்லை என புகாரும் கொடுத்துள்ளனர். தற்போது தாய் கீதா, அவரது தங்கை புவனேஸ்வரி, உதயன், கார்த்திக் என நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுவன் ஹரிஷை கொலை செய்ய கார்த்திக் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில் சிறுவன் ஹரிஸ் அடுத்தநொடி நாம் கொலையாக போகிறோம் என தெரியாமல் கார்த்திக்கின் கையை பிடித்துக்கொண்டு வெகுளியாக நடந்துபோகும் காட்சிகள் யார் மனதையும் உருக்கும்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.