Skip to main content

கடலூரில் மூன்று பேர் தொடர் மாயம்... போலீசார் விசாரணை!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

Four people in a series of hiding in Cuddalore ... Police investigation!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ளது ஆலடி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் 38 வயது ராஜி. இவருடைய மனைவி அம்பிகா வயது 35. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு முதல் அம்பிகாவை காணவில்லை. அவரது கணவர் ராஜி மற்றும் உறவினர்கள் உட்பட பலரும் பல்வேறு இடங்களில் தேடியும் அம்பிகா பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கணவர் ராஜி கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ராஜி மனைவி அம்பிகா மாயமான தகவல் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திட்டக்குடி அருகில் உள்ள மேல ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 48 வயது பழனிவேல். கடந்த 12ஆம் தேதி முதல் வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பழனிவேல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி சுமதி வயது 40 ராமநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதேபோன்று விருத்தாசலம் அடுத்துள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் 21 வயது இன்பமதி. இவர் விருத்தாசலத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி முதல் இன்பமதியை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் அவரது பெரியம்மா அனைவரும் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் இன்பமதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இன்பமதியை விருத்தாசலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

தங்களின் குடும்ப சூழ்நிலை குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அதை தீர்க்க முடியாத கவலை மனதில் குழப்பம் இப்படிப் பல்வேறு மன குழப்பம் காரணமாக தலைமறைவாகி விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி மூன்று சம்பவங்களும் வெவ்வேறு ஊர்களில் நடந்த சம்பவங்கள் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.