Skip to main content

அலைக்கழிக்கும் அதிகாரிகள்; தீக்குளிப்பேன் என கலங்கும் முன்னாள் வி.ஏ.ஓ

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

Former vao in struggle to change patta

 

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி, கீழ் நங்கவரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் என். மருதை (71). முன்னாள் கிராம நிர்வாக அலுவலரான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவர், தனக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்த இடத்திற்கான பட்டா சிட்டா பத்திரம் என அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளார். அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்த போதிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு கணினி மையமாக்கப்பட்டபோது 43 சென்ட் என்பதற்கு பதிலாக 12 சென்ட் என தவறாக கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதனால், கணினி பட்டாவை திருத்தம் செய்யக்கோரி கடந்த 2020ம் ஆண்டு முதல் பலமுறை கரூர் மாவட்ட ஆட்சியர், குளித்தலை கோட்டாட்சியர், குளித்தலை வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் குறைதீர்க்கும் பிரிவு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஜமாபந்தி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளார். இருப்பினும் அவரது கோரிக்கை இது நாள் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.

 

குளித்தலை தாலுகா அலுவலகத்திற்கு விசாரணை மனுவை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் கூறினாலும், அங்கு சென்று அவர் விசாரித்தால் ‘உங்களுடைய மனுவே வரவில்லை அது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை’ என்று சாக்குப் போக்கு சொல்லி அலைய விடுவதாக குற்றம் சாட்டுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மருதை. 

 

தனது மனைவி பெயரில் உள்ள 43 சென்ட் நிலத்தின் பட்டாவை தவறாக கணினியில் பதிவு செய்யப்பட்டதால், அவரது மனைவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால் அவர் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் கண்கலங்க கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மருதை. 

 

மேலும், தனக்கு 71 வயது ஆகிறது. தினமும் என்னால் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 30 கிலோமீட்டர் தூரம் சென்று வர இயலவில்லை. இதற்கு மேலும் என்னை அலைக்கழித்தால், நான் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கும் வழியில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று கண்ணீர் மல்க கூறுகிறார். 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நாய் கடித்ததில் படுகாயம்; 4 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

4-year-old girl was admitted to hospital after being bitten by dogs near Manaparai

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீ.பூசாரிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வடிவேல் என்பவரது 4 வயது சிறுமி, தன்னுடைய வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் சிறுமியைக் கடித்துக் குதறவே சிறுமி‌ சப்தம் போட்டுள்ளார். உடனே குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு பார்த்தபோது வலது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 

 

இதனையடுத்து உடனடியாகச் சிறுமியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதும் பொதுமக்களையும்‌ கோழி மற்றும் கால்நடைகளையும் கடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை இனியும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இதேபோல் சம்பவத்தால் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

2017ல் நடந்த பயங்கர கொலை! - தீர்ப்பளித்த நீதிமன்றம்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Trichy court sentence for accused

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடந்த 2017ம் ஆண்டு தாய், மகனை அடித்து இரட்டைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.13,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது மனைவி தனபாபு மற்றும் மகன் சத்தியமூர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே ஊரில் வசித்து வந்த தனபாபுவின் அண்ணன் ராமசாமி பஞ்சாயத்து தலைவராக இருக்கும்போது, தேர்தல் செலவுக்காக தனபாபு ஒரு லட்சம் பணம் வெளியில் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் இவர்களைக் கொலை செய்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்துவிட்டார்.

 

இதனால், தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் ராமசாமி மகன் ராஜகோபால் என்பவரிடம் கொடுத்த பணத்தைக் கேட்டபோது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ராஜகோபால் என்பவர், சத்தியமூர்த்தி வீட்டுக்குச் சென்று ஒரு கனமான ஆயுதத்தால், தூங்கிக் கொண்டிருந்த தனபாபு மற்றும் சத்தியமூர்த்தி தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.

 

பின்பு அவர்களை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து வீட்டு வாசலில் உள்ள மண் ரோட்டில் போட்டுவிட்டு தனது டாக்டரை அவர்கள் மீது ஏற்றி விபத்தில் இறந்ததுபோல் செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

பின்னர் இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி செல்வ முத்துக்குமாரி தீர்ப்பளித்தார். அதில் தாய், மகன் என இரட்டைக் கொலை செய்த ராஜகோபாலுக்கு இரண்டு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 13000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்