Skip to main content

சுவரேறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? விஜயதரணி காட்டம்

Published on 21/08/2019 | Edited on 22/08/2019

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை இரவு சென்றனர். அப்போது அவர்கள், ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி.


பல லட்சம் கோடியை ஏமாற்றி விட்டு தப்பி சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களை பிடிப்பதற்கு இந்த அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது?
 

இங்கிலாந்திலும், லண்டனிலும் எந்த சுவரை ஏறி குதித்தது இந்த அரசு. ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர். முன்னாள் மத்திய அமைச்சரை மரியாதை குறைவாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவிற்கு இவர்கள் செய்கிறார்கள் என்றால் இது அரசியல் காழ்புணர்ச்சிதான்.

 

Vijayadharani


 

சிபிஐ விசாரணைக்காக இங்கே இருக்கிறவர் அவர். வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் மனு வரப்போகிறது. அதற்குள் சுவர் ஏறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? 
 

காழிப்புணர்ச்சியை இவ்வளவு தீவிரமாக நிறைவேற்றக் கூடிய இடத்தில் இந்த அரசு இருக்கிறது. ஒரு வழக்கு இருக்கிறது என்றால் அரசாங்கம் சட்ட ரீதியாக அணுகி சட்டரீதியாக அதை அமல்படுத்த வேண்டுமே தவிர, அதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில் ஒரு  நாடகமாக இதை கையாண்டுள்ளனர்.
 

P C


 

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பெரும்பான்மையில் வெற்றி பெற்ற அரசு என்ற எண்ணத்தில் இதுபோன்று செய்கிறார்கள். இதுபோன்ற செயல் அரசிற்கு பெரிய கெட்டப் பெயரைத்தான் ஏற்படுத்தும். அரசு ஒருவரை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு சில நடைமுறைகள் இருக்கிறது. சட்டரீதியான அணுகுமுறை இருக்கிறது. அதை எல்லாம் சரியாக பின்பற்றி இதை செய்ய வேண்டும். அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளனர். அதிகாரிகளே இப்படி செயல்படுவது மக்கள் மத்தியில் இது பெரிய கண்டனத்திற்கு உரியதாக உள்ளது.
 

இந்தியா முழுக்க பேசக்கூடிய ஒரு சம்பவமாக இது மாறிவிட்டது. இந்த வழக்கை தீவிரமாக நடத்த வேண்டும் என்று சொன்னவர்களுக்கே, இப்போது நடக்கின்ற சம்பவங்களை பார்த்து இவ்வளவு அராஜகமாக நடக்கிறதே என்று அவர் மீது இரக்கத்தை கூட உருவாக்கியுள்ளது. எதிரிகளுக்கு கூட அவர் மீது இரக்கம் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம், ஜனநாயகம் எல்லாவற்றையும் மீறி நடத்தப்படுகின்ற இந்த விதத்தைப் பார்த்து அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.