Skip to main content

நலமாக உள்ளார் இரா.நல்லகண்ணு... நாளை டிஸ்சார்ச்...

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

former communist party leader Nallakannu will discharge soon

 

இந்திய நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக விடுதலை வேண்டி போராடிய பல தலைவர்கள் வயது மூப்பு காரணமாக மறைந்துவிட்டார்கள். அந்த விடுதலைப் போராட்டத்தில் எஞ்சி நிற்கும் கம்பீர போராளி என்றால் தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தான்...!

 

விடுதலைப் போராட்டத்திற்கு பிறகும் ஆட்சியாளர்களை எதிர்த்து, மக்கள் விரோதிகளை எதிர்த்துக் களத்தில் நின்று ஏழை எளிய மக்களுக்காக, தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் என்றுமே சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்தி வருபவர் நல்லகண்ணு.

 

இந்த கரோனா வைரஸ் காலத்திலும் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இப்போது 96 வயது ஆகிறது. இந்த நிலையில் நேற்று (20/08/2020) இரவு திடீரென்று அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது உடனே அவர், அருகே வசிக்கும் தனது பேரனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு அந்த நள்ளிரவிலேயே அவரை அழைத்துக்கொண்டு சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அட்மிட் செய்தார் அவர் பேரன். 

 

இந்தத் தகவல் தெரியவர, கட்சி கடந்தும் நல்லகண்ணுவை மதிக்கக்கூடிய அனைத்துக்கட்சி தலைவர்களும் கவலையுற்றனர்.

 

இந்நிலையில், இன்று காலை அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. பிற்பகலில் அந்தப் பரிசோதனை முடிவு வந்தபோது அவருக்கு எந்தத் தொற்றும் இல்லை என்று தெரிந்தது. இந்தச் செய்தி அவரது கட்சி தொண்டர்கள் உட்பட தமிழக மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனைகள் செய்துவருகிறார். இன்று பகலுக்கு மேல் அவருக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. லேசாக சளி இருப்பதால் இன்னும் ஓரிரு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டியது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
sayaji shinde admitted to hospital

மராத்தி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஷாயாஜி ஷிண்டே. தமிழில் 'பாரதி' படத்தில் சுப்ரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்பு 'பூவெல்லாம் உன் வாசம்', 'பாபா' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்திலும், 'தூள்', 'வெடி' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்தார். 

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயற்கையின் மீது அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இதற்காக 2015 ஆம் ஆண்டு சஹ்யாத்ரி தேவ்ரையின் என்ற அமைப்பை ஏற்படுத்தி பசுமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இது அவர் தற்போது வாழ்ந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில் ஷாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிரா சதாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதயத்தில் ஒரு சில அடைப்புகள் இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நலமுடன் இருப்பதாக அவரே மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Next Story

அஜித்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Ajith Kumar at Hospital

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம்  அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. கடந்த 2 ஆம் தேதி அஜித் அவரது மகன் ஆத்விக் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

இந்த நிலையில், அஜித் குமார்  சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.