Skip to main content

மணல் கடத்தலைத் தடுத்த வனக்காப்பாளரைக் கொல்ல முயற்சி! கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
மணல் கடத்தல்  sand smuggling

 

கள்ளக்குறிச்சி அருகே மணல் கடத்தலைத் தடுத்த வன காப்பாளரைக் கொல்ல முயன்ற நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வனப்பகுதியில் மணல் கடத்துவதாக வனச்சரக அலுவலர் காதர்பாட்சா அவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து காதர் பாட்ஷா மற்றும் வனக்காப்பாளர் ராஜ்குமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் 1:30 மணி அளவில் மணல் கடத்தல் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை கையும் களவுமாக பறிமுதல் செய்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் ஆலங்குப்பம் வனப்பகுதியில் மினி லாரியில் மணல் கடத்துவதாக தகவல் கிடைக்கவே வனக்காப்பாளர் ராஜ்குமார் மட்டும் பைக்கில் அந்த மணல் கடத்தல் லாரியை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளார். அப்போது ராஜ்குமார் மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார் லாரி ஓட்டுநர்.

 

ராஜ்குமார் பைக்கில் இருந்து குதித்து ஓடி கீழே விழுந்து, படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இதனால் மிரண்டு போன லாரி டிரைவர் மணல் கடத்தல் லாரியை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

 

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அந்த லாரியை கைப்பற்றி தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே உயிர் தப்பிய வனக்காப்பாளர் ராஜ்குமார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வனத்தை பாதுகாக்கும் வன அலுவலர்களை மணல் கடத்தல்காரர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.