Skip to main content

வழி மறித்து நகை பறிப்பு - சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

 Forced theft of jewelry-Police investigation with CCTV footage

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவரை மடக்கி 21 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாவது வழக்கம். ஆனால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணை நடு ரோட்டில் மடக்கி இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பலவந்தமாகப் பெண் அணிந்திருந்த நகையைப் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பும் காட்சியானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தாண்டவராயன் தெருவில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவர் ஆரணி காந்தி மார்க்கெட் பகுதியில் நாட்டு மருந்துக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நாட்டு மருந்துக் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தாண்டவராயன் தெருவில் இருக்கும் அவருடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது முகமூடி அணிந்துகொண்டு அவரை பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் திடீரென ஈஸ்வரியின் இருசக்கர வாகனத்தினை முந்திச் சென்று அவரை வழிமறித்து நின்றனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் இறங்கி ஈஸ்வரியை நோக்கிச் சென்று பலவந்தமாக அவர் கழுத்திலிருந்த நகையைப் பறித்துக்கொண்டு இருந்து சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாகக் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது இந்தக் காட்சிகள் போலீசாரிடம் சிக்கியது. தற்போது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது