Skip to main content

மீண்டும் மீண்டும் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

 Flooding in the vellaru again and again

 

கடந்த 2 மாதத்தில் மூன்று முறைக்கு மேல் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்வராயன் மலை மற்றும் துறையூர் அருகே உள்ள பச்சைமலை ஆகிய பகுதிகளிலிருந்து உருவாகி ஓடி வருகிறது வெள்ளாறு. இதில் கல்லாறு, ஸ்வேதா நதி, சின்னாறு, ஆனைவாரி ஓடை ஆகிய சிற்றாறுகளும், ஓடைகளும் இணைந்து சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை கடந்து சென்று கடலில் கலக்கிறது.

 

இந்த வெள்ளாற்றில் கடந்த 2 மாதத்திற்குள் மூன்றுமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றில் சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர கிராமங்களான ஆவினன்குடி, நெய்வாசல், சன்னாசி நல்லூர், சௌந்தர சோழபுரம், சம்பேரி, கூடலூர், இடையம், குடிக்காடு, இறையூர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

 

மேற்படி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி கடக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளாற்றில் போதிய மழையின்றி தண்ணீர் வராமல் வறண்டு கிடந்தது. இந்த ஆண்டு மூன்று முறைக்கு மேல் கடந்த 2 மாதமாக வெள்ளாற்றில் தண்ணீர் ஓடி வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கரையோர கிராம மக்களுக்கு வறட்சிக் காலங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. ஆழ்குழாய் போர்வெல் மூலம் விவசாயத்திற்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். மூன்று முறைக்கு மேல் வெள்ளம் வந்ததைக் கண்டு பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.