Skip to main content

மனவளர்ச்சி குறைவுடையோரின் நெகிழ்ச்சியான சந்திப்பு! -மகிழ்ச்சியில் திளைத்த பள்ளி!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

 

பல வருடங்களுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடுவதெல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. சிவகாசி – சாட்சியாபுரம் – எல்வின் நிலையம் – சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளியும், முன்னாள் மாணவர் கூடுகை என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. 39 வருடங்களுக்குப் பிறகு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவரவர் குடும்பத்தினரோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

 

Happily schooled

 

“பொதுவாக, மனவளர்ச்சி குறைவுடையோரை முழுவதுமாக சரிப்படுத்திவிட முடியாது. அதேநேரத்தில்,  அவர்களின் நிலை மேலும் தீவிரம் அடையாமல்  பார்த்துக்கொள்ள முடியும்.” என்றார் எல்வின் சென்டர்  சமூக சேவகரான ரெபேக்கா. ஆனாலும்,   அந்த முன்னாள் மாணவர்களில் 7 பேர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களாக இருக்கின்றனர். 

Happily schooled

 

இப்பள்ளியில் தான் கற்ற கல்வி மூலம்,  காளான் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஒருவர். இன்னொரு முன்னாள் மாணவருக்கு மனவளர்ச்சி குறைபாட்டோடு பேசவும் வராது. அவரோ, தான் வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணமும் செய்திருக்கிறார். மற்றொரு மாணவர், தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், தன்னுடைய உழைப்பால் பணம் சம்பாதித்து,  தன் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில்,  தங்களின் வாழ்க்கை அனுபவங்களை மாணவர்கள் பலரும் பகிர்ந்துகொண்டனர். 

 

Happily schooled

 

மனவளர்ச்சி குறைவுடையோருக்கு மனிதனின் சராசரி ஆயுள் இல்லையென்பதால், முன்னாள் மாணவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். கனத்த இதயத்தோடு, கண்ணீர்மல்க அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள் அந்த முன்னாள் மாணவர்கள்.

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூட, மகிழ்ச்சியில் திளைத்தது அந்தப்பள்ளி!

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.