Skip to main content

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழகம், புதுவை படகுகள் விடுவிப்பு! நஷ்ட ஈடு கேட்டு மீனவர்கள் கோரிக்கை! 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018


 

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள தமிழகம் மற்றும் புதுவையைச் சோந்த படகுகள் அனைத்தையும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளமைக்கு மீனவர்கள் வரவேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கை படகுத்தளத்தில் ஏறக்குறைய நான்கு வருடமாக கேட்பாரற்று கிடந்த, முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு நஷ்ட ஈடு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

 

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட வலை பயன்படுத்தி  மீன்பிடிப்பில் ஈடுபட்டு கடல்வளங்களையும் மீன்வளத்தையும் அழித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த 2015 ஆம் ஆண்டு மே 10ந் தேதி முதல 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிறைபிடிக்கப்பட்ட  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, காரைக்கால் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 174 படகுகளை விடுவிக்க அந்நாட்டு சட்டத்துறை அதிகாரிகள் உத்திரவிட்டது. 
 

இதனையடுத்து 168 தமிழக விசைபடகுகள் விடுவிக்கப்பட்டு இலங்கை வெளி விவகாரத்துறை அமைச்சத்திடம் ஒப்படைக்கட்டது மேலும் திருகோணமலை மற்றும் புத்தலம் பகுதியில் உள்ள படகுகள் அனைத்தையும் வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்க வேண்டும் என இலங்கை சட்டத்துறை உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

 

    இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்ய மீனவ குழு யாழ்பாணம் சென்ற மீனவ குழு படகுகளை ஆய்வு செய்ததில் 20 முதல் 30 படகுகள் மட்டுமே  திருப்பி எடுக்கும் நிலையில் உள்ளதாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துவுள்ள நிலையில், முற்றிலும் சேதமடைந்த படகுளின் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு! 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
21 fishermen of Tamil Nadu have been sentenced to judicial custody

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (16.03.2024) காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே இன்று (17.03.2024) மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதே சமயம் மீனவர்கள் 21 பேரை சிறைப் பிடித்து ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 21 பேரையும் மார்ச் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டதுடன் இவர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்கள் நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.