Skip to main content

சுருக்குமடி வலை விவகாரம்: பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை! நாகை மீனவர்களிடையே மீண்டும் பதற்றம்!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

மீனவர்கள் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் மீண்டும் நாகை மீனவ கிராமங்கள் பதற்றமடைந்துள்ளன.

 

சுருக்குமடி வலை விவகாரம் குறித்து இரவு 10 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 35 மீனவ கிராமங்கள், சுருக்குமடி வலைக்குத் தடை என்ற அரசின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்தனர். சுருக்குமடி வலைக்கு ஆதரவான 15 கிராமங்களுக்கும் 25 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சுருக்குமடி வலை விவகாரம் பல ஆண்டுகளாகவே பூதாகரமாகியிருக்கிறது. சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி வழங்க வலியுறுத்தி சில கிராமங்களும், அனுமதிக்கக் கூடாது என்று பல கிராம மீனவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

தமிழக அரசோ சுருக்குமடி வலையைப் பயன்படுத்தகூடாது என்றும் அதனால் மீன்வளம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்குறியாகிவிடும் என்றும் அனுமதி மறுத்துள்ளது. 

 

இருதரப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கும் இடையே நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாகை மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தலைமையில் மீனவ பிரதிநிதிகளுக்கான சுமுக பேச்சு வார்த்தை நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்திற்கு நாகை மாவட்டத்தில் உள்ள 55 மீனவ கிராமங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  ஆனால் 50 கிராமங்களைச் சேர்ந்த 120 மீனவ பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். ஜூலை 16 ஆம் தேதி இரவு 10 மணிவரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அரசின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்தும், சுருக்குமடி வலையைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் 35 மீனவகிராம நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர்.

 

ஆனால்  13 மீனவ கிராம பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கிராமங்களுக்கு வருகின்ற ஜூலை 21ஆம் தேதி முதல் 25 நாட்களுக்குள் சுருக்குமடி வலைகளை ஒப்படைப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

நாகை மாவட்ட 55 மீனவ கிராமங்களில் 5 கிராமங்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் நாகை நம்பியார் நகர் மற்றும் சாமந்தான் பேட்டை ஆகிய இரண்டு கிராமங்கள் பேச்சு வார்த்தையில் உடன்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

சுமுக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் மீனவ கிராமங்கள் மீண்டும் பதற்ற நிலைக்குச் சென்றிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.