Skip to main content

கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்! சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரிக்கை!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி, நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடற்கரையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கடலூர் மாவட்டத்தில், ஜூன் 01-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் தமிழ்நாடு கடல் - மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் அரசு ஆணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும் அதனை மீறி சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தினால், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததுடன் இதனை மீறுவோருக்கு மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தது. 

 

இதனிடையே கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மீனவர்கள் சிலர் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பு மீனவர்களிடையே  மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

 

கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் சுருக்குமடி வலைகளுடன் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து திரும்பின. கடலூர் துறைமுக பகுதியில் விற்பனைக்காக மீன்கள் இறக்கப்பட்டபோது அங்கு வந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராமலட்சுமி, "சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்கவோ, வாங்கவோ கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என எச்சரித்தார். அதையடுத்து சுருக்குமடி மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை புதுச்சேரி பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றனர்.

 

இதுபற்றி தகவலறிந்த மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர், கடலூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை நடத்தி, மீன்கள் ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து ஏராளமான மீன் வியாபாரிகள் மீன்வளத்துறை அலுவலத்தில் திரண்டனர். ஒவ்வொரு வாகனத்திலும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மீன்கள் இருப்பதாகவும், அதை விடுவிக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வரவில்லை. 

 

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

இதனால் 'சுருக்கு மடி வலைகளை அனுமதிக்கும் வரை கடலூர் மாவட்டத்தில் அனைத்து வகையான படகுகளிலிருந்து மீன்கள் வாங்குவதை நிறுத்த போகிறோம், அனைத்து ஐஸ் கம்பெனிகளும் மூடப்படும்' என்று அறிவித்தனர்.

 

‘சுருக்கு மடி வலைக்கான தடையை நீக்கக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரியும்’ அனைத்து சுருக்குமடிவலை மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதனிடையே டன் கணக்கில் மீன்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

 

அதேவேளையில் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய வாகனங்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும், சிறிய வாகனங்களுக்கு ரூபாய் 30 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு 20 வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. 

 

இதையடுத்து சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலில் இறங்கி போராடப்போவதாக கூறி மீனவர்கள் இன்று கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் குடும்பத்தினருடன் கூடினர்.

 

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் போராட்டக்காரர்களிடம் கடலில் இறங்க அனுமதியில்லை எனக் கூறியதால் கடற்கரையில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் சார் ஆட்சியர் ஜெகதீஸ்வரன், மீன்வளத்துறை, காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம், ‘அரசுக்கு தகவல் தெரிவித்து கோரிக்கையைப் பரிசீலிப்பதாக’ சமரசம் செய்ததையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.