Skip to main content

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்டிய காவல் படை!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

 

நடுக்கடலில் தவித்த மீனவர்கள் ஐந்து பேரை இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டனர். அதைத் தொடர்ந்து, மீனவர்களை இன்று (19/02/2021) காலை கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

 

கடந்த பிப்ரவரி 16- ஆம் தேதி காரைக்காலுக்கு கிழக்கே 205 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் படகு ஒன்று பழுதாகி நிற்பதாக இந்தியக் கடலோரக் காவல்படை மையத்திற்கு சிக்னல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கண்காணிப்பு விமானத்தை அனுப்பி பார்வையிட்டதில் படகு ஒன்று பழுதாகி நிற்பதை உறுதிப்படுத்திய கடலோரக் காவல் படையினர், அதற்கு அருகாமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான அன்னிபெசன்ட் கப்பலுக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக, அந்த கடல் பகுதிக்கு விரைந்து சென்ற கடலோரக்  காவல் படையினர், நடுக்கடலில் படகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த, அந்தமான் மீனவர்கள் சின்னசாமி, செல்வநாயகம், கோகுல்ராஜ், ஜேம்ஸ், சரவணன் ஆகிய ஐந்து பேரையும் மீட்டனர். அதையடுத்து, அவர்களை இன்று (19/02/2021) காலை காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

நடுக்கடலில் படகு பழுதானதால் 18 மணி நேரம் தவித்தோம்; நடுக்கடலில் தத்தளித்த எங்களை மீட்ட இந்தியக் கடலோரக் காவல் படைக்கு கோடான கோடி நன்றிகள் என்று அந்தமான் மீனவர்கள் தெரிவித்தனர். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.