Skip to main content

தனிமனித முன்னெடுப்பு; பள்ளிக்கு செல்லும் முதல் தலைமுறை குழந்தைகள்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

First generation children going to school! In cuddalore

 

கிள்ளை அருகே குழந்தைகள் முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்வதை வரவேற்று குழந்தைகளுக்கு மாலை அனிவித்த சிதம்பரம் சார் ஆட்சியர்.

 

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே திருவள்ளுவர் குடியிருப்பு உள்ளது.  இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கல்வியறிவு பற்றி தெரியாதவர்கள். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் நாடோடிகளாக இந்த நாட்டில் வாழ்வதற்கான எந்த ஒரு அரசு அடையாள அட்டைகளும் இல்லாமலும், ஒரு மனிதனுக்கு தேவையான உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இடம் என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி துன்பத்திலும் துயரத்திலும் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்து வந்தனர்.

 

இதனை அறிந்த  அந்த பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் பூராசாமி, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து  அவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கென்று புதிய சி.மானம்பாடி கிராமத்தில் அரசு மூலம் வீட்டுமனை பட்டா பெற்று அவர்கள் வசிக்க ஏற்பாடு செய்தார். அந்த இடத்திற்கு திருவள்ளுவர் குடியிருப்பு என பெயர் சூட்டப்பட்டது.  இதனை  தொடர்ந்து அந்த மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மூலம் பல்வேறு உதவிகளை  செய்துவருகிறார்.

 

இவர்களின் குழந்தைகள் முதல் தலைமுறையாக கல்வி கற்க அரசு பள்ளிக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பூராசாமி தலைமை தாங்கினார். இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன கலந்துகொண்டு முதல் தலை முறையாக அரசு பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து, கற்றல் உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை அப்பகுதியில் நட்டு வைத்தார். பின்னர் அந்தப் பகுதி மக்களிடம் அவர் பேசுகையில் நான் இருக்கும் வரை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன் எனவே இங்குள்ள மக்கள் அனைவரும் கல்வி பயின்று நல்ல முறையில் முன்னேற வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள கிராம மக்களை ஈர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.