Skip to main content

குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்து காரணம் என்ன..? நேரில் பார்த்த பக்தர்கள் பேட்டி...!

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

Fire Accident in kanyakumari, Mandaikaadu sri Bhavathi Amman temple


தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, முழு ஊரடங்கில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட அரசு அனுமதிக்கவில்லை. அதேநேரம் ஆகம விதிகளின்படி கோயில் பூஜைகளை பக்தர்களின்றி மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

 

இந்நிலையில்,குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில். அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.  இக்கோயிலில் தினமும்  மூன்று நேரம் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். மேலும், மாசி மாதம் நடக்கும் 10 நாட்கள் திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் இட்டு வழிபாடு செய்வது வழக்கம்.

 

அதே போல் கேரளா மற்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வணங்கிச் செல்வது வழக்கம். அதேபோல, திருவிழாவின் 10 ஆவது நாள் நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும் ஒடுக்கு பூஜை என்பது பெரும் பிரசித்தமானது. அந்த நேரத்தில் கலந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிசப்தமாக நின்று அம்மனை தரிசிப்பார்கள். அப்போது கீழே சிறு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும். இந்த கோயிலில் முழுக்க முழுக்க கேரளா முறைப்படி நடக்கும் பூஜையில் ஆண்களைவிட பெண் பக்தர்களே அதிகம் கலந்துகொள்வர்.

 

இந்த நிலையில், கரோனா ஊரடங்கால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் நடக்கும் மூன்று நேரப் பூஜைகளை கோயில் பூசாரிகள் பின் பக்க வழியாகச் சென்று நடத்தி வந்தனர்.  பூஜையின் போது சில பக்தர்கள் கோயிலின் வெளியே ரோட்டில் நின்று அம்மனை தரிசித்து செல்வார்கள். அதே போல் இன்றும் (2-ம் தேதி) வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு பூசாரிகள் பூஜை  செய்த நிலையில், காலை 7 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் பின் பக்கம் திடீரென்று தீ பிடித்து, அது மளமளவென கோயிலின் மேற்கூரை வரை பரவியது. 

 

Fire Accident in kanyakumari, Mandaikaadu sri Bhavathi Amman temple

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் பூசாரிகளும் நிர்வாகிகளும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் சொல்லியதையடுத்து தக்கலை, குளச்சல் பகுதியிலிருந்து சென்ற தீயணைப்பு வீரர்களோடு பக்தர்களும் தீயை அணைத்தனர். இதில் கோயிலுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், கோயில் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.

 

கோயிலில் தீ பற்றி எரியும் போது  அதைப் பார்த்த மண்டைக்காடு ஸ்ரீ தேவி கோயில் பக்தர்கள் சங்கத்தினர் நம்மிடம் பேசுகையில், “கோயிலில், உள்ளே தொங்க விடப்பட்டிருந்த தூக்கு விளக்கில் எண்ணெய் திரியை எரிய விட்டுவிட்டு அதை பூசாரிகள் கவனிக்காமலிருந்ததால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்காததால் பூசாரிகளுக்குக் காணிக்கை வருமானம் குறைந்துள்ளது.  இதனால் தீபாராதனை முடிந்ததும் கோயிலுக்கு வெளியே ரோட்டில் நின்று சாமி கும்பிடும் பக்தர்களுக்கு  சந்தனம் குங்குமம் கொடுத்து காணிக்கை வாங்குவதற்காக பூசாரிகள் வெளியே வந்து விடுவார்கள். அப்படி தான் இன்றைக்கும் வெளியே வரும்போது தூக்கு விளக்கு திரி, துணியில் பட்டு அந்த தீ கருவறையின் மேற்கூரையில் பரவியது.

 

இதை ரோட்டில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் பார்த்து சத்தம் போட்டதால் பெரியளவில் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கு காரணமான பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பக்தர்கள் கூறியதன் அடிப்படையில், போலீஸார் தங்களின் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். இச்சம்பவம் குமரி கேரளா பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.