Skip to main content

விருத்தாசலம் அருகே இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல்! கத்தி குத்தில் ஒருவர் உயிரிழப்பு

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

கடலூர் மாவட்டம், விருத்தாசலம்  அருகேயுள்ள  கீழப்பாளையூர்  மணிமுத்தாறில் அரசு மதுக்கடை அருகே இரு தரப்பு இளைஞர்கள் மோதிக் கொண்டதில் அரிதாஸ் என்பவரின் மகன் அருள்பாண்டி என்பவரை கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார்.  தலையில் அடிபட்ட நிலையில் தருமலிங்கம் மகன் பூவரசன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

kadalore

 

குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், அக்கிராமத்திலுள்ள மதுக்கடையை அகற்றக்கோரியும் கீழப்பாளையூர் -  கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
 

விருத்தாசலம் ஏ.எஸ்.பி தீபாசத்தியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
 

உயிரிழந்த அருள்பாண்டியின்  உடல் உடற்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இதையடுத்து கீழப்பாளையூர் கிராமத்தில் போலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு.. உயிருக்குப் போராடிய தாய் மருத்துவமனையில் அனுமதி 

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Father and son due to electrocution.. Mother was admitted to the hospital

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி பெரியம்மா. இவர் துணிகளை தனது வீட்டில் இருந்த கொடியில் காயப்போட சென்றுள்ளார். இரும்பால் செய்யப்பட்டிருந்த கொடி மின் கம்பத்தின் ஸ்டே ஒயரை உரசியவாறு சென்றுள்ளது. இதை  பெரியம்மா கவனிக்காமல் துணிகளை காயப்போட்டதால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. 

 

மின்சாரம் தாக்கியதில் அதிர்ந்து கத்திய பெரியம்மாவினை பார்த்த அவரது மகன் மணிகண்டன் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவருக்கும் மின்சாரம் தாக்கியது. அறுந்து விழுந்த மின்சார கம்பி அருகில் இருந்த பெரியம்மாவின் கணவர் ராமர் மீது விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மின்சாரம் தாக்கிய நிலையில் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார். பெரியம்மாவினை காப்பாற்றிய அப்பகுதி மக்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமர் மற்றும் மண்கண்டனின் உடல்களை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மின்சாரம் தாக்கி அதில் தந்தை மகன் உயிர் இழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Next Story

நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பதாக புகார்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

"We will go anywhere if we ask for Rs. 50 per bundle or Rs. 100 per bundle" - Farmers who are unable to sell the grown paddy

 

விருத்தாச்சலம் அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் தர மறுத்ததால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு முகுந்தநல்லூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம்.

 

இந்நிலையில் தொரவளூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயியின் நெல்லை, இயந்திரத்தின் மூலம் தூற்றி, கொள்முதல் செய்து கொண்டிருக்கும்போது, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க வேண்டும் என நிலைய அதிகாரி விஜயகுமார்  கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயி, “வறுமையின் காரணமாக, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க முடியாது. ரூ.30 ரூபாய் தருகிறேன்” என கூறியுள்ளார்.

 

ஆனால் நிலைய அதிகாரி விஜயகுமார், பழனிச்சாமியின் நெல் ஈரமாக உள்ளது எனக் கூறி, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை, மீண்டும் விவசாயியின் சாக்கில் தொழிலாளிகள் மாற்றினர். இதனால் விவசாயி பழனிச்சாமி, செய்வதறியாமல் திகைத்து நின்றார். 

 

வாங்கிய கடனையும், குடும்ப செலவையும் சமாளிப்பதற்காக இரவு பகலாக கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் மூட்டைக்கு 50 கொடு, 100 கொடு என அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நாங்க எங்கையா போவோம் என ஏழை, எளிய விவசாயிகள் செய்வதறியாது நிற்கின்றனர். 

 

லஞ்சம் தர மறுத்த விவசாயின் மூட்டையை, ஈரம் எனக் கூறி நிறுத்திய நிலைய அதிகாரி விஜயகுமார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.