Skip to main content

மத்திய அரசின் பெயரைப் பயன்படுத்தி பெண் தலைமையிலான கும்பல் மோசடி!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Female-led gang using federal government name ....!

 

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த டிசம்பர் மாதம் 50 -க்கும் மேற்பட்ட பட்டதாரி வாலிபர்கள் ஒன்று திரண்டு மாவட்ட எஸ் .பி. தங்கதுரையைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.

 

அதில், "ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் தாசம்பாளையத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளர் சண்முகம் என்பவர் எங்களிடம், மத்திய அரசின் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 50 சதவீதம் மானியம் பெற்று வீடுகள் கட்டித் தருவதாகக் கூறினார். இதை நம்பி நாங்கள் ஒவ்வொருவரும் இரண்டு லட்சம், மூன்று லட்சம் என அவரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தோம். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் சொல்லியபடி வீடு கட்டிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்திவந்தார். பிறகு ஒருநாள் திடீரென அவர் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் எங்கோ தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று அந்தப் புகார் மனுவில் கூறியிருந்தனர்.

 

இந்தப் புகார் மனுவை விசாரிக்க ஈரோடு எஸ்.பி. தங்கதுரை உத்தரவிட்டார். குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பேரில், எம்.எஸ்.பில்டர்ஸ் உரிமையாளர் சண்முகம், சென்ற ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல் நவ., மாதம் 13ம் தேதி வரை மத்திய அரசின் வீட்டுவசதி வாரியம் மூலம் 50 சதவீத மானியத்தில் வீடு கட்டித் தருவதாகக் கூறி ஈரோடு, பவானி, குமாரபாளையம், அத்தாணி, விஜயமங்கலம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருப்பூர், கோவை, தஞ்சாவூரைச் சேர்ந்த 57 பேரிடம் பணத்தை டெபாசிட் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், முன் பணமாக ரூ.6.50 கோடி அளவுக்குப் பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்தனர்.

 

இந்நிலையில் ஜனவரி 10ஆம் தேதி ஈரோட்டில் எம்.எஸ். பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர் சண்முகத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ. தமிழரசு தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்பேரில், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு சரக்கு ஆட்டோ, 2 பைக், 2 செல்ஃபோன் என மொத்தம் ரூ.3லட்சம் மதிப்பிலான பொருட்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து சண்முகத்தின் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டுச் சதி செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

 

இந்த மோசடியில் சண்முகம் மனைவி மேனகபிரியா தான் முக்கிய நபராக இருந்துள்ளார். அதேபோல் எம்.எஸ்.பில்டர்ஸ் மேலாளர் சுரேஷ், கட்டிட மேஸ்திரிகள் உதயகுமார், குணசேகரன், நவீன் ஆகிய ஐந்து பேரும் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

 

மோசடி வேலைக்கு மூளையாகச் செயல்பட்ட மோகன பிரியா பிடிபட்டால் தான் மத்திய அரசு பெயரை பயன்படுத்தி இந்தக் கும்பல் செய்த மற்ற மோசடிகளும் வெளிவரும் என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.