Skip to main content

கடன் பிரச்சனை; மனைவி, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

father who poisoned his wife and children

 

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் சரகம், வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்(45). இவரது மனைவி பிரபாவதி(32). இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சிதம்பரம் புறவழிச்சாலை, தாயம்மாள் நகரில் குடியிருந்து வருகின்றனர். கணேஷ் சிதம்பரம் பொய்யாப்பிள்ளைச்சாவடி பைபாஸ் அருகே வி.எஸ்.கே. என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். இவர் கடந்த 23-ம் தேதி இரவு வியாபாரத்தில் கடன் அதிகமாகி நஷ்டம் ஏற்பட்டதால் திராட்சை ஜூஸில் எலி பேஸ்ட்டை கலந்து மனைவி பிரபாவதி மற்றும் அவரது இரு பிள்ளைகளுக்கும் தெரியாமல் கொடுத்துள்ளார்.  

 

இதனையடுத்து, நேற்று (24.11.2022) காலை 11 மணியளவில் அனைவரும் வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் மனம் உடைந்த கணேஷ், புதுச்சத்திரம் அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்திற்குச் சென்று, பி.முட்லூரில் எம்ஜிஆர் சிலை அருகே உரக்கடை வைத்துள்ள அக்பர் அலி என்ற தனது நண்பருக்கு  வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு வியாபாரத்தில் கடன் அதிகமாகி விட்டதாகவும், எனது சாவுக்கு சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் (அதிமுக), தச்சம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் டி.எம்.ஆர். சகோதரர்கள் ஐவர் மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோர்தான் காரணம் என்று தெரிவித்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

கணேஷ் அனுப்பிய ஆடியோவைக் கேட்ட அக்பர் அலி, கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கவலைக்கிடமாக இருந்த மூன்று பேரையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். கணேஷை தேடிச் சென்ற போது அன்னப்பன்பேட்டை அருகே ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து கணேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட மூவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணேஷ் தனது சட்டை பாக்கெட்டில், எனது மரணத்திற்குக் காரணம் சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  டி.எம்.ஆர். சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகன், ராஜா, கண்ணன், விஜயராகவன், நடராஜன்(பாஜக) மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்றும், தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விவரம் பற்றியும் குறிப்பிட்டு எழுதி வைத்திருந்தார். போலீசார் அதனைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.