Skip to main content

ஒரே விபத்தில் உயிரழந்த தந்தை மற்றும் கணவர்..! கதறி அழுத பெண்.!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

father and husband passes away in ship accident

 

பொழப்பு தேடி நடுக்கடலுக்குப் போன மீனவா்களின் விசைப்படகு மீது சிங்கப்பூா் கப்பல் மோதியதில், 12 போ் உயிரிழந்த சம்பவம் குமரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மீனவா்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் தெருவைச் சோ்ந்த தாசன் (60), இவரது மருமகன் ஹென்லின் அலெக்சாண்டா் (38), ராமநாதபுரத்தைச் சோ்ந்த மாணிக்கவேல், பாலமுருகன், பழனி, வேல்முருகன், தூத்துக்குடி மணப்பாறையைச் சோ்ந்த டென்சன் ஆகிய 7 பேரும் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சோ்ந்த சுநில்தாஸ் உள்ளிட்ட 7 பேரும் என 14 மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 11ஆம் தேதி கேரளா கோழிக்கோடு, வேப்பூரைச் சோ்ந்த ஜாபா் என்பவருக்கு சொந்தமான அரப்பா எனும் விசைப்படகில் கா்நாடாக மாநிலத்தில் மீன் பிடிக்கச் சென்றனா்.

 

12ஆம் தேதி இரவு மங்களூரில் இருந்து 58 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு பயங்கர இடி மின்னலுடன் கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது இரவு 12 மணிக்கு அந்த வழியாக வந்த சிங்கபூா் ஏ.பி.எல்-லீ ஹாலேறா எனும் சரக்கு கப்பல், அந்த விசைப்படகு மீது மோதியது. அதில் சிலா் தூக்கத்திலும், சிலா் விழித்துக்கொண்டும் இருந்தனா். இடிபட்ட வேகத்தில் அந்த விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. இதில் ராமநாதபுரம் வேல்முருகனும், மேற்கு வங்காளம் சுநில்தாசும் பெட்ரோல் கேனைப் பிடித்தபடி கடலில் மிதந்துகொண்டிருந்தனா். மேலும் மற்ற மீனவா்களான குளச்சல் தாசன், இவரது மருமகன் ஹென்லின் அலெக்சாண்டா் மற்றும் மாணிக்கதாஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனா். மற்ற 9 மீனவா்களும் மாயமானார்கள். 

 

father and husband passes away in ship accident

 

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேல்முருகனையும், சுநில்தாசையும் இடித்த கப்பலில் இருந்தவா்கள் மீட்டு, அந்தக் கப்பலில் ஏற்றினார்கள். இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்து வந்த இந்திய கடற்படை வீரா்கள், அந்தக் கப்பலையும் பிடித்து, இறந்துபோன மூன்று மீனவா்களின் உடல்களையும் மீட்டனா். காணாமல் போன மீனவா்களை ஹெலிகாப்டா் மற்றும் நவீன ரோந்து கப்பல் மூலம் தேடி வருகின்றனா். இந்தநிலையில், இறந்த மூன்று மீனவா்களின் உடல்களையும் மங்களூா் அரசு மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வுக்குப் பிறகு (15ஆம் தேதி) உறவினா்களிடம் ஓப்படைத்தனா். இதில் குளச்சலைச் சோ்ந்த தாசன், மற்றும் ஹென்லின் அலெக்சாண்டரின் உடலைப் பார்த்து உறவினா்கள் கதறி அழுதார்கள். 

 

father and husband passes away in ship accident

 

ஹென்லின் அலெக்சாண்டரின் மனைவி சுமதி கணவனின் உடலைப் பார்த்து “12ஆம் தேதி காலையில் பேசினீங்க. பிள்ளைங்க உறங்கி கிடந்ததால் பேச முடியலையினு வருத்தப்பட்டீங்க. 10 நாள் கழிச்சி கரைக்கு வந்த பிறகுதான் இனி பேச முடியும்னு சொல்லியிட்டு இருக்கும்போதே ஃபோன் கட்டாயிச்சி. மேலும் வீட்டுல இருந்து போகும்போது சொன்னீங்க, இளைய மகனுக்க பிறந்தநாளுக்கு நான் இங்க இருக்க மாட்டேன், அதுனால் மே 2ஆம் தேதி என்னோட பிறந்தநாளோடு மகனுக்க பிறந்தநாளும் சோ்த்து கொண்டாடனும்னு சொல்லிட்டு, இப்பம் இப்படி வந்தியிருக்கீங்களே. நீங்க சொன்னதுபோல மகனுக்க பிறந்தநாளுக்கு இருக்க மாட்டேனு, அதுபோல இல்லாம போயிட்டீங்களே. இனி எங்களுக்கு எந்த நாளும் இல்லையே” என கணவனின் உடலையும், தந்தையின் உடலையும் ஒரே நேரத்தில் சுமதி பார்த்துக் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இறந்துபோன இருவரின் குடும்பத்தினருக்கும் பாஜக பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் விஜய்வசந்த், நாகா்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.